Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொரோனாவைரஸ் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு


புதிய வகை கொரோனா வைரசான கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.

“புதிய வகை கொரோனா வைரசான கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை விரிவாக ஆய்வு செய்தேன். இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது முதல், தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது வரை, பல்வேறு அமைச்சகங்கள் & மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன.

அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. நாம் ஒருங்கிணைந்து பணியாற்றி, தற்காப்பை உறுதி செய்வதற்கான சிறிய அளவிலான முக்கிய நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரசான கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை விரிவாக ஆய்வு செய்தேன். இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது முதல், தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது வரை, பல்வேறு அமைச்சகங்கள் & மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. @narendramodi மார்ச் 3, 2020

அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. நாம் ஒருங்கிணைந்து பணியாற்றி, தற்காப்பை உறுதி செய்வதற்கான சிறிய அளவிலான முக்கிய நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள வேண்டும். @narendramodi மார்ச் 3, 2020

******