பி.எம்.இந்தியா
சிக்கிம் மாநிலத்தின் ‘மாநில நிறுவன தினத்தை’ முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சிக்கிம் தனது 50-வது மாநில நிறுவன தினத்தைக் கொண்டாடுவதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைகிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு சிக்கிம் அளித்துள்ள பங்களிப்பு, பெரிதும் மதிக்கப்படுவதாகவும் பாராட்டப்படுவதாகவும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். 50-வது மாநில நிறுவன தினக் கொண்டாட்டங்களின் போது சிக்கிமிற்கு மேற்கொண்ட தமது சமீபத்திய பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அம்மாநில மக்கள் வெளிப்படுத்திய அன்பும் வாஞ்சையும் தம்மை மிகவும் நெகிழச் செய்ததாகக் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:
“மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, எனது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் வளர்ச்சிக்கு சிக்கிம் அளித்துள்ள பங்களிப்பு பெரிதும் மதிக்கப்படுகிறது. அம்மாநில மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் செழிப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.
சிக்கிம் தனது 50-வது நிறுவன தினக் கொண்டாட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் இத்தருணத்தில், இந்த நன்னாள் வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இக்கொண்டாட்டங்களின் போது சிக்கிம் மக்களுடன் இணைந்து இருக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிக்கிமில் நான் பெற்ற அந்த அன்பான வரவேற்பு, எனது நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும். வரும் காலங்களிலும் சிக்கிமின் வளர்ச்சிப் பயணத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.”
Release ID: 2261691
****
TV/PKV/SH
Greetings to my sisters and brothers on their Statehood Day. The contribution of Sikkim to India’s development is deeply valued. Wishing the people of the state good health and prosperity.
— Narendra Modi (@narendramodi) May 16, 2026
This occasion comes at a time when Sikkim is marking 50th Statehood Day celebrations. A…