பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் இந்தியா – ஈரான் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 2018 பிப்ரவரி 17அன்று ஈரான் அதிபரின் இந்திய வருகையின்போது கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இருநாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இருதரப்பு உறவுகளை பலப்படுத்தவும் உதவும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பின்வரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:-
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவும், ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயவும், செயல்பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
=============