Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜப்பானின், டோக்கியோவில் நடைபெற்ற ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ கருத்தரங்கத்தில் பிரதமர் உரை

ஜப்பானின், டோக்கியோவில் நடைபெற்ற ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ கருத்தரங்கத்தில் பிரதமர் உரை

ஜப்பானின், டோக்கியோவில் நடைபெற்ற ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ கருத்தரங்கத்தில் பிரதமர் உரை

ஜப்பானின், டோக்கியோவில் நடைபெற்ற ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ கருத்தரங்கத்தில் பிரதமர் உரை


டோக்கியோவில் நடைபெற்ற ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ கருத்தரங்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்துவதில், குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு எவ்வளவு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் விளக்கினார். இந்தியாவில் அதிக அளவில் ஜப்பான் நிறுவனங்கள் இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் பல முக்கிய தொழில் திட்டங்களில் ஜப்பான் பங்குதாரராக உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வலிமை குறித்தும் விளக்கினார். பொருளாதார ரீதியில் இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் குறித்து பேசிய பிரதமர், பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டது, டிஜிட்டல் பரிமாற்றங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. குறித்தும் பேசினார்.

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம், வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் மக்கள் தொகையில் இளையோர் அதிக அளவில் இருப்பது ஆகியவை ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது என்றார் பிரதமர். மேலும், குறைந்த செலவில் உற்பத்தி, தொலைத் தொடர்பு தொழில் மற்றும் மின்னணு துறை குறித்தும் பிரதமர் விளக்கினார்.

இந்தியா மற்றும் ஜப்பான் பின்பற்றும் பொதுவான வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் பேசினார். இருநாடுகளும் ஒன்றாக இணைந்து, இந்தோ-பசிபிக், தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா உட்பட உலகில் உள்ள பிற நாடுகளில் வலுவான வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

*****