Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் குடிமைப் பணி அலுவலர் திரு. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் மறைவிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தமும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.

“சிறந்த குடிமைப் பணி அலுவலராகத் தன்னைத் தனித்து காட்டியவர் திரு. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன். முக்கியப் பொதுப் பிரச்சினைகள் குறித்து தனது எழுத்துகள் மற்றும் கருத்துகள் மூலம் என்றும் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.