பி.எம்.இந்தியா
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
பயன்கள்
சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைப்பது, இந்த யூனியன் பிரதேசத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுவதோடு, மருத்துவர் பற்றாக்குறைக்கும் தீர்வாக அமையும். யூனியன் பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி வாய்ப்புகள் கூடுதலாக கிடைக்கும். இந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள மலைவாழ் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இந்த மருத்துவக் கல்லூரி பயனளிக்கும். மருத்துவர்களின் எண்ணிக்கை யூனியன் பிரதேசத்தில் அதிகரிப்பது, சுகாதாரத்தை மேம்படுத்த உதவும்.
*****
ஈ.எம்/க.