Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு பரிமல் நத்வானி எழுதிய புத்தகத்தை பிரதமர் பெற்றுக் கொண்டார்


கிர் மற்றும் ஆசிய சிங்கங்கள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திரு பரிமல் நத்வானி எழுதிய  “கால் ஆஃப் தி கிர்” என்ற காபி டேபிள் புத்தகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார்.

இந்தப் புத்தகத்தை பிரதமருக்கு திரு பரிமல் நத்வானி புதுதில்லியில் வழங்கினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் கூறியிருப்பதாவது:

திரு பரிமல், உங்களை சந்தித்ததில் மிகுந்த  மகிழ்ச்சி.  கிர் குறித்த உங்கள் படைப்பின் பிரதியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். வனவிலங்குகள் மீது ஆர்வமுள்ள ஒருவராக உங்களை நான் எப்போதும் அறிவேன். கம்பீரமான கிர் சிங்கம் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த படைப்பு நிச்சயமாக உதவும். @mpparimal”

BR/KR

***