Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி உயர்நீதிமன்றத்தின் 50வது ஆண்டுவிழாவில் பிரதமர் பங்கேற்பு

தில்லி உயர்நீதிமன்றத்தின் 50வது ஆண்டுவிழாவில் பிரதமர் பங்கேற்பு


தில்லி உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தில்லி உயர்நீதி மன்றத்துடன் தொடர்பு கொண்டவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அவர் போற்றினார். இந்த விஷயத்தில் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு என்ன பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் முதல் தேதி சர்தார் பட்டேலின் பிறந்த தினமாகவும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர், வழக்கறிஞரான சர்தார் பட்டேல் இந்த தேசத்திற்கு சேவையாற்ற தனது வாழ்வையே அர்ப்பணித்தவர் என்றும் தெரிவித்தார். அகில இந்திய குடிமைப் பணிகள் உருவாக்கியது உட்பட சர்தார் பட்டேல் ஆறிய பங்களிப்புகளை அவர் நினைவு கூர்ந்தார்.

மாற்றுத் தீர்வுக்கான நுணுக்கங்களுக்கு சட்டத்துறையினர் வலு சேர்ப்பது பாராட்டுக்குரியது என்று பிரதமர் குறிப்பிட்டார். நீதித்துறையின் முன் உள்ள சவால்களைப் குறிப்பிட்ட அவர் எதிர்காலத்தில் இதற்கான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


***