Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய வாக்காளர் தினம் – பிரதமர் வாழ்த்து


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி குடிமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குடியரசின் கொண்டாட்டமாக தேர்தல்களை குறிப்பிட்ட பிரதமர், ஒவ்வொரு தகுதியான வாக்காளரும் தனது வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். இளைஞர்களுக்கு 18 வயதாகும் போது தாங்கள் பதிவு வாக்காளர் உரிமைக்கு பதிவு செய்து கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

“அனைவருக்கும் தேசிய வாக்காளர் தின வாழ்த்துகள். தேர்தல் ஆணையத்திற்கு எங்களின் வாழ்த்துகள். குடியரசில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கிற்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

தேர்தல் என்பது குடியரசின் கொண்டாட்டமாகும். இது குடியரசு நாட்டில் மக்களின் மன விருப்பத்தை பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு தகுதியான வாக்காளரும் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது இளைய நண்பர்கள் 18 வயது ஆகும்போது தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

*******