Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நம்பிக்கை, வளர்ச்சி, பொதுநலன் ஆகியவற்றில் அரசின் 12 ஆண்டுகால அர்ப்பணிப்புக் குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார்


கடந்த 12 ஆண்டுகளாக அரசு நம்பிக்கை, வளர்ச்சி, பொதுநலன் ஆகியவற்றில்  அர்ப்பணிப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.   நாட்டின் 140 கோடி மக்களின் ஆசீர்வாதம், தேசத்திற்கு முன்னுரிமை என்ற உணர்வு ஆகியவற்றுடன் இளையோர், மகளிர், விவசாய சகோதர, சகோதரிகளுக்கு அதிகாரமளிப்பதில் எந்த முயற்சியும் விடுபடவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அயராத முயற்சிகளின் விளைவாக, தற்போது நாடு உள்கட்டமைப்பு முதல் மின்னணு புரட்சி வரை உலகின் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளதாக திரு மோடி கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைய சேவை, சிறந்த நிர்வாகம், வளமை ஆகியவற்றின் பாதையில் அரசு தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் என்று பிரதமர் உறுதிபூண்டுள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270530&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR