பி.எம்.இந்தியா
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் திரு. ஷேர் பகதூர் தேவ்பா பிரதமர் திரு. நரேந்திர மோடியை நேற்று புது தில்லியில் சந்தித்து பேசினார்.
நிலநடுக்கத்திற்கு பிறகு நேபாளத்தின் மறு கட்டுமான முயற்சிகளுக்கு உதவுவதில் இந்தியா முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக திரு. நரேந்திர மோடி கூறினார்.
நேபாளத்தில் ஏற்பட்ட அரசமைப்பு சட்டம் / சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுத்த முயற்சியின் மூலம் அடைந்து உள்ள சாதனையை பாராட்டிய பிரதமர், ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு அடிப்படையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்புவதாக பிரதமர் கூறினார்.