பி.எம்.இந்தியா
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் தொழில்நுட்ப பணிநிலை பிரிவின் கீழ் ஒரு புதிய ‘குரூப் ஏ’ பணிநிலையை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய பணிநிலை “இந்திய திறன் மேம்பாட்டு பணி” என்று அழைக்கப்படும்.
இதோடு கீழ் வரும் பணிநிலை சீரமைப்புக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது:
1. முதுநிலை நிர்வாக அதிகாரி அளவில் ஒரு பணியிடம் அதிகரிப்பு
2. இளநிலை நிர்வாக அதிகாரி அளவில் ஒரு பணியிடம் அதிகரிப்பு
3. முதுவர் பதவி அளவில் ஏழு பணியிடம் அதிகரிப்பு
அதேபோல் முதுவர் பதவி அளவில் உள்ள மூத்த அலுவல் பணியிடங்களுக்கு 15 சதவிதம் வரை முறை சார தெரிவு முறையை அறிமுகபடுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.