Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாராதீப் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் – பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்

பாராதீப் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் – பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்

பாராதீப் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் – பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்


ஒடிசாவில் உள்ள பாராதீப் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்பணித்தார்.

இந் நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாடிய பிரதமர், வளர்ச்சி சம்மந்தமான அதிகாரபூர்வமான நிகழ்ச்சியில் பெருமளவில் மக்கள் பங்கேற்றதைப் பிரதமர் பாராட்டினார்.

ஒடிசாவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு பிஜு பட்நாயக்கை நினைவு கூர்ந்த பிரதமர், பாராதீப் ஒடிசா மக்களின் வளர்ச்சித் தீவாக மாறும் என்று கூறினார். வேலை வாய்ப்புகள் மூலம் இளைஞர்கள் பயனடைவதுடன் நாடு முழுவதும் எரிசக்திக்காக விறகுகளை நம்பியுள்ள ஏழைப் பெண்கள் எல்.பி.ஜி. எரிவாயுவை பெற முடியும்.

முத்ரா வங்கி மற்றும் தொடங்கிடு இந்தியா போன்ற அரசு முயற்சிகள் இந்தியாவின் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

துவக்க விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தரும் முன், உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பிரதான கட்டுப்பாட்டு அறை மற்றும் இண்ட்மேக்ஸ் பிரிவையும் பார்வையிட்டார். இண்ட்மேக்ஸ் உற்பத்தித் திறன் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் எடுத்துக்காட்டாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.