Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் ஈரான் விஜயம்

பிரதமரின் ஈரான் விஜயம்


இரண்டு நாட்கள் ஈரானில் அரசுமுறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட தொடர்ச்சியான தகவல்கள் வருமாறு:

“ஈரான் அதிபர் திரு ரவுஹானியின் அழைப்பினை ஏற்று இன்றும் நாளையும் ஈரானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் நான் ஆர்வமாக இருக்கிறேன்
ஈரானும் இந்தியாவும் ஈரானும் நாகரீகம் சார்ந்த உறவினை கொண்டாடி வருகின்றன. இரு நாடுகளும் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் பிராந்திய வளமை உள்ளிட்டவைகளில் பகிர்ந்துகொள்ளப்பட்ட நலனைக் கொண்டுள்ளன.

அதிபர் ரவுஹானி மற்றும் மேதகு ஈரானின் உச்ச தலைவருடன் எனது சந்திப்புகள் நமது தளத்தகை கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு வழங்கும்.
பிணைப்பு, வாணிபம், முதலீடுகள், எரிசக்தி கூட்டாண்மை, கலாசாரம் மற்றும் மக்களுடன் மக்கள் தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.

சாபஹார் ஒப்பந்தம் எனது இந்த சந்திப்பின் போது நிறைவுபெறும் என்று நான் எதிர்நோக்குகிறேன்.

தெஹரானில் உள்ள குருதுவாராவிற்கு விஜயம் செய்வேன். இந்தியா மற்றும் ஈரான் இடையேயான உறவுகளின் கடந்த காலம் மற்றும் வருங்கால வாய்ப்பு வளம் குறித்த சர்வதேச மாநாட்டை தொடங்கி வைக்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.