பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (28.02.2026) குஜராத் செல்கிறார். பிற்பகல் 3.45 மணி அளவில் சனந்தில் நடைபெறும் மைக்ரான் செமி கண்டக்டர் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்தில் பல்வேறு புதிய வசதிகளை பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இதன் மூலம் செமி கண்டக்டர் துறையில் வர்த்தக ரீதியான உற்பத்தி மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமி கண்டக்டர் முக்கிய பாகங்களின் ஏற்றுமதி தொடங்குகிறது. இந்த நடவடிக்கை செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துகிறது. கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டம் இந்தியாவின் செமிகண்டக்டர் இயக்கத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்ட முதலாவது திட்டமாகும். 22,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மொத்த செலவுகளுடன் முறையான அனுமதி பெற்று இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் செமிகண்டக்டர் துறையில் உத்திசார் முதலீடுகளைக் கண்காணிப்பதற்கான அரசின் நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
சன்ந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுக்கும். செமிகண்டக்டர் சேமிப்பு அமைப்பு உற்பத்திக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த ஆலை உலக அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதிலும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிக செயல்திறன் கொண்ட கணினிக்குத் தேவைப்படும் நினைவகம் மற்றும் சேமிப்பு வசதிகளுக்கான சேவைகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233506®=3&lang=1
***
TV/SV/KPG/RK