Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள்


அன்புச் சகோதர, சகோதரிகளே,

காவிரியாற்றின் நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் பிரச்சினையின் தொடர்ச்சியாக கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உருவாகியுள்ள நிலைமை மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

தனிப்பட்ட வகையில், இந்த நிகழ்ச்சிப்போக்குகளைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். எந்தவொரு பிரச்சினைக்குமே வன்முறை தீர்வை வழங்கி விடாது. ஜனநாயகத்தில் பொறுமை மற்றும் பரஸ்பர பேச்சுவார்த்தை ஆகியவற்றின் மூலமாகவே தீர்வுகள் எட்டப்படும்.

இந்த பிரச்சினைக்கு சட்டவரம்புகளுக்கு உட்பட்டே தீர்வு காண முடியும். சட்டத்தை மீறுவதென்பது நடைமுறைக்கேற்ற மாற்றாக இருக்க முடியாது. கடந்த இரண்டு நாட்களாக நாம் கண்டு வரும் வன்முறையும் தீவைப்பும் ஏழைகளுக்கும், நமது நாட்டு சொத்துக்களுக்குமே இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

நமது நாடு மிக மோசமான சூழ்நிலைகளை சந்திக்கும்போதெல்லாம், நாடு முழுவதிலும் உள்ள மக்களைப் போலவே, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன்தான் அத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். அத்தகையதொரு பொறுப்புணர்வை வெளிப்படுத்துமாறும், அதே நேரத்தில் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையிலான பொறுப்புகளை மனதில் கொள்ளுமாறும் இந்த இரு மாநில மக்களையும் நான் வேண்டிக் கொள்கிறேன்.

மற்ற விஷயங்கள் அனைத்திற்கும் மேலாக, நமது நாட்டின் நலன்கள், நமது நாட்டை வளர்த்தெடுப்பது ஆகியவற்றை நீங்கள் மனதில் கொள்வீர்கள் என்றும், நிதானத்திற்கும் ஒத்திசைவிற்கும் முன்னுரிமை வழங்கி, வன்முறை, சேதப்படுத்துதல், தீவைப்பு ஆகியவற்றைக் கைவிட்டுவிட்டு, நல்ல தீர்வு காண்பீர்கள் என்றும் நம்புகிறேன்.