Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்

பிரதமர் வெம்ப்ளி அரங்கத்தில் இந்திய இங்கிலாந்து சமூக மக்களிடையே உரையாற்றினார்


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பன்முகத்தன்மையே இந்தியாவின் சிறப்பு, பெருமை மற்றும் அதன் வலிமை என்று குறிப்பிட்டார். பிரதமர் டேவிட் கேமரூன் முன்னிலையில் லண்டனின் வெம்ப்ளி அரங்கத்தில் ஒரு பெருந்திரள் கூட்டத்தின் முன் பேசிய பிரதமர் சீக்கியர்களும், சூஃபி பாரம்பரியமும் இந்தியாவுக்கு அளித்த பங்கினை குறிப்பிட்டார். சீக்கிய மக்களை லண்டன் மாநகரில் சந்தித்ததை குறிப்பிட்ட பிரதமர், அவர்களது வலியை புரிந்து கொள்வதோடு, அவர்களின் பிரச்சினைகளை புரிந்து அவற்றை களைவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

தனது ஒரு மணி நேரத்துக்கும் மேலான உரையில், இந்தியாவுக்கான தொலைநோக்கு இலக்கைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ராஜஸ்தானைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவர் 50க்கும் மேற்பட்ட கல்வி தொடர்பான மென்பொருட்களை தயாரித்து அவற்றை இலவசமாக விநியோகித்ததைப் பற்றி குறிப்பிட்டார். ஹரியானாவைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவர் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது குறித்து, மகளுடன் செல்ஃபி என்று தொடங்கிய ஒரு இயக்கம் ஒரு உலகளாவிய வெற்றிகரமான இயக்கமாக மாறியதை குறிப்பிட்டார். இம்ரான் கான் மற்றும் இந்தியாவுடனான செல்ஃபி என்பதை உருவாக்கிய பஞ்சாயத்துத் தலைவர்கள் போன்றோரால் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உலகின் பிரபலமான மதங்கள் அனைத்தும் இந்தியாவில் அதிக அளவில் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த விழுமியங்களை இந்திய வம்சாவளியினர், அவர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று, இந்தியாவின் மிகப் பெரிய தூதுவர்களாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தனது அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களை குறிப்பிட்ட பிரதமர், குறிப்பாக, இந்திய குடிமக்களின் வாழ்க்கையை மாற்றும் வகையிலான சுத்தமான இந்தியா, சுத்தமான எரிசக்தி ஆகிய திட்டங்களைப் பற்றி குறிப்பிட்டார். அதிகப்படியான சூரிய ஒளி பெறக்கூடிய நாடுகளை ஒருங்கிணைத்து, ஒரு “சூரிய ஒளிக் கூட்டணியை” அமைத்து, பொருளாதார ரீதியாக லாபமிக்க சூரிய ஒளியை உற்பத்தி செய்யப் போவதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியா இதற்கான முன்னோடியாக விளங்கும் என்று குறிப்பிட்டார்.

நீங்கள் தொலைக்காட்சிகளிலும், தலைப்புச் செய்திகளிலும் பார்ப்பதை விட, இந்தியா மிகப் பெரியது என்று பிரதமர் குறிப்பிட்டார்.