Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரம்மாகுமாரிகள் இயக்கத்தினரின் 80வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

பிரம்மாகுமாரிகள் இயக்கத்தினரின் 80வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார்.


இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், பிரம்மாகுமாரிகள் இயக்கத்தினரின் 80வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் காணொளிக் காட்சிகள் மூலம் உரையாற்றினார்.

இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பன்னாட்டு மாநாடு மற்றும் கலாச்சார திருவிழாவில் பங்கேற்க வருகை புரிந்துள்ள பிரதிநிதிகளை வரவேற்ற பிரதம மந்திரி அவர்கள், பிரஜாபிதா பிரம்மாகுமாரி ஐஸ்வர்யா விஷ்வித்யாலயாவின் நிறுவனர் தாதா லேக்ராஜ் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் அவர், தனது 100வது வயதிலும் தொடர்ந்து சமூகத்திற்கு பணியாற்றி வரும் தாதி ஜானகி அவர்களை உண்மையான கர்மயோகி என பாராட்டினார்.

சூரிய எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட பணிகளை அவர் பாராட்டினார். அவர் ஊழலை ஒழிக்கும் விதத்தில் டிஜிட்டல் பரிமாற்றங்களை அதிகரிக்கவும் கேட்டுக் கொண்டார்.

தூய்மை பாரதம் மற்றும் எல்.ஈ.டி. விளக்குகள் குறித்து பேசிய பிரதம மந்திரி அவர்கள், அதன் நன்மைகளையும் விவரித்தார்.

***