பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானுடன் உரையாடினார்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் குறித்த தங்களது கவலைகளைப் பற்றி தலைவர்கள் இருவரும் விவாதித்தனர். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர செயல்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இந்தியாவும் பிரான்சும் தொடர்ந்து இணக்கமாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படும் என்று பிரதமர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:
“இன்று எனது நண்பர் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானுடன் பேசினேன். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் மற்றும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர தீர்வின் அவசியம் குறித்த எங்கள் கவலைகளைப் பரிமாறிக் கொண்டோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து மேற்கொள்வோம்.
@EmmanuelMacron”
(Release ID: 2235698)
****
TV/BR/SH
Spoke with my friend President Emmanuel Macron today. We discussed our shared concerns over the evolving situation in West Asia and the need for a return to dialogue and diplomacy. We will continue to engage closely and coordinate efforts towards the early restoration of peace…
— Narendra Modi (@narendramodi) March 5, 2026