பி.எம்.இந்தியா
மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மூத்த பிரமுகர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, இதர பிரதிநிதிகளே, எனதருமை நாட்டு மக்களே!
ஒவ்வொரு தேசத்தின் வரலாற்று பயணத்திலும் சில தருணங்கள் அழிக்க முடியாதவையாக மாறும். மே 28, 2023 என்ற இன்றைய தினம், அதுபோன்ற புனிதமான தருணம். நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டை அமிர்த பெருவிழாவாக நாடு கொண்டாடி வரும் நேரத்தில், இந்திய மக்கள் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் என்னும் அன்பளிப்பை வழங்கி உள்ளார்கள். இது வெறும் கட்டிடம் அல்ல, 140 கோடி இந்தியர்களின் லட்சியம் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பு. இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் நமது ஜனநாயக ஆலயம், இது. திட்டமிடலை யதார்த்தத்துடனும், கொள்கைகளை அமலாக்கத்துடனும், மன உறுதியை செயலாகத்துடனும், உறுதிப்பாட்டை வெற்றியுடனும் இணைக்கும் முக்கிய கருவியாக இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் விளங்கும்.
நண்பர்களே,
புதிய பாதைகளில் பயணிப்பதன் மூலமாகவே புதிய மாதிரிகள் உருவாக்கப்படும். இன்று புதிய பாதைகளை வகுப்பதற்காக, புதிய இலக்குகளை புதிய இந்தியா நிர்ணயித்து வருகிறது. புதிய உற்சாகமும், புதிய ஆர்வமும் எழுந்துள்ளது. இந்தியாவின் உறுதித் தன்மை, மக்கள் சக்தி மற்றும் இந்திய மக்களின் உணர்வை ஒட்டுமொத்த உலகமும் கவனிக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் போது புனித செங்கோலும் இந்த புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சோழப் பேரரசு காலத்தில் சேவை, கடமை, தேசத்தின் பாதையின் அடையாளமாக செங்கோல் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் ஆதீன துறவிகளின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த செங்கோல் அதிகார மாற்றத்தின் அடையாளமாகியது. தமிழ்நாட்டில் துறவிகள் இன்று காலை நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வந்திருந்து நமக்கு ஆசி வழங்கினார்கள். அவர்களது வழிகாட்டுதலின் கீழ் இந்த புனித செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம் இந்த செங்கோல் நமக்கு எழுச்சியூட்டும்.
நண்பர்களே,
இந்தப் புதிய நாடாளுமன்றம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு புதிய ஆற்றலையும், வலிமையையும் வழங்கும். தங்களது வேர்வை மற்றும் கடின உழைப்பால் பணியாளர்கள் இந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நமது அர்ப்பணிப்பால் இதனை மேலும் புனிதமாக மாற்றுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நமது கடமை. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்பதோடு, பல தலைமுறைகளுக்கு அதிகாரம் அளித்து, இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமல்படுத்தப்படும் புதிய சட்டங்கள், வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியாவை மாற்றும். கொள்கை, நீதி, உண்மை, கண்ணியம் மற்றும் கடமை ஆகிய கோட்பாடுகளுக்கு உட்பட்டு வளமான, வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் அடித்தளமாக திகழும் என்று நான் நம்புகிறேன். நன்றி!
***
AD/BR/RK
The new Parliament House is a reflection of the aspirations of new India. https://t.co/qfDGsghJgF
— Narendra Modi (@narendramodi) May 28, 2023
मैं सभी देशवासियों को भारतीय लोकतन्त्र के इस स्वर्णिम क्षण की बहुत-बहुत बधाई देता हूं: PM @narendramodi pic.twitter.com/CzJrYda3Mw
— PMO India (@PMOIndia) May 28, 2023
ये सिर्फ एक भवन नहीं है।
— PMO India (@PMOIndia) May 28, 2023
ये 140 करोड़ भारतवासियों की आकांक्षाओं और सपनों का प्रतिबिंब है।
ये विश्व को भारत के दृढ संकल्प का संदेश देता हमारे लोकतंत्र का मंदिर है। pic.twitter.com/aRxAw40i2n
जब भारत आगे बढ़ता है तो विश्व आगे बढ़ता है।
— PMO India (@PMOIndia) May 28, 2023
संसद का ये नया भवन, भारत के विकास से, विश्व के विकास का भी आह्वान करेगा। pic.twitter.com/k2SmBSxJc7
जब भारत आगे बढ़ता है तो विश्व आगे बढ़ता है।
— PMO India (@PMOIndia) May 28, 2023
संसद का ये नया भवन, भारत के विकास से, विश्व के विकास का भी आह्वान करेगा। pic.twitter.com/k2SmBSxJc7
जब भी इस संसद भवन में कार्यवाही शुरू होगी, सेंगोल हम सभी को प्रेरणा देता रहेगा। pic.twitter.com/mWWVJ8BzcT
— PMO India (@PMOIndia) May 28, 2023
भारत एक लोकतान्त्रिक राष्ट्र ही नहीं बल्कि लोकतन्त्र की जननी भी है, Mother of Democracy भी है। pic.twitter.com/rulDUQAtIq
— PMO India (@PMOIndia) May 28, 2023
हमारा लोकतंत्र ही हमारी प्रेरणा है, हमारा संविधान ही हमारा संकल्प है।
— PMO India (@PMOIndia) May 28, 2023
इस प्रेरणा, इस संकल्प की सबसे श्रेष्ठ प्रतिनिधि, हमारी ये संसद ही है। pic.twitter.com/SdU3oCdE0M
ग़ुलामी के बाद हमारे भारत ने बहुत कुछ खोकर अपनी नई यात्रा शुरू की थी।
— PMO India (@PMOIndia) May 28, 2023
वो यात्रा कितने ही उतार-चढ़ावों से होते हुए, कितनी ही चुनौतियों को पार करते हुए, आज़ादी के अमृतकाल में प्रवेश कर चुकी है। pic.twitter.com/r9R9T5oMYS
आज नए संसद भवन को देखकर हर भारतीय गौरव से भरा हुआ है। pic.twitter.com/Cx2OGJbZfL
— PMO India (@PMOIndia) May 28, 2023
हमारे पास 25 वर्ष का अमृत कालखंड है।
— PMO India (@PMOIndia) May 28, 2023
इन 25 वर्षों में हमें मिलकर भारत को विकसित राष्ट्र बनाना है। pic.twitter.com/HnieE0XrCT
मुझे विश्वास है, इस संसद में जो जनप्रतिनिधि बैठेंगे, वे नई प्रेरणा के साथ, लोकतंत्र को नई दिशा देने का प्रयास करेंगे: PM @narendramodi pic.twitter.com/FPiaIZ8gTu
— PMO India (@PMOIndia) May 28, 2023
संसद का यह नया भवन, नये भारत के सृजन का आधार बनेगा। pic.twitter.com/KEfSEf10f4
— PMO India (@PMOIndia) May 28, 2023