பி.எம்.இந்தியா
இன்று மகாராஷ்டிராவின் நிறுவன நாள். சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு மரியாதை செலுத்தி, மகாராஷ்டிர தினத்தில் இந்த நிலத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இன்று குஜராத் நிறுவன நாளுமாகும். குஜராத் நிறுவன தினத்தில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து குஜராத்தி சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
வேவ்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிராவின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு எல். முருகன் அவர்களே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, திரு அஜித் பவார் அவர்களே, உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வருகை தந்துள்ள படைப்பு உலகைச் சேர்ந்தவர்களே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தகவல், தகவல் தொடர்பு, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே, பெண்களே, தாய்மார்களே!
நண்பர்களே,
இன்று, 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் மும்பையில் ஒரே அமைப்பின் கீழ் கூடியுள்ளனர். ஒரு வகையில், உலகளாவிய திறமை, உலகளாவிய படைப்பாற்றல் ஆகியவற்றின் உலகளாவிய சூழல் அமைப்பின் அடித்தளம் இன்று இங்கே அமைக்கப்படுகிறது. உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு என்பது ஒவ்வொரு கலைஞருக்கும், உங்களைப் போன்ற ஒவ்வொரு படைப்பாளருக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும். அங்கு ஒவ்வொரு கலைஞரும், ஒவ்வொரு இளைஞரும் ஒரு புதிய யோசனையுடன் படைப்பு உலகத்துடன் இணைவார்கள். இந்த வரலாற்று மற்றும் அற்புதமான தொடக்கத்திற்காக இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
இன்று மே 1, 112 ஆண்டுகளுக்கு முன்பு, மே 3, 1913 அன்று, இந்தியாவின் முதல் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா வெளியிடப்பட்டது. நேற்று அதன் தயாரிப்பாளர் தாதாசாகேப் பால்கேவின் பிறந்த தினமாகும். கடந்த நூற்றாண்டில், இந்திய சினிமா இந்தியாவை உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யாவில் ராஜ் கபூரின் புகழ், கேன்ஸில் சத்யஜித் ரேயின் புகழ், ஆஸ்கார் விருதுகளில் ஆர்.ஆர்.ஆர் வெற்றி ஆகியவற்றில் இது காணப்படுகிறது. குரு தத்தின் சினிமா கவிதையாக இருந்தாலும் சரி, ரித்விக் கட்டக்கின் சமூக பிரதிபலிப்பாக இருந்தாலும் சரி, ஏ.ஆர். ரஹ்மானின் இசையாக இருந்தாலும் சரி, ராஜமௌலியின் காவியமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கதையும் இந்திய கலாச்சாரத்தின் குரலாக மாறியுள்ளது மற்றும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளது.
நண்பர்களே,
பல ஆண்டுகளாக, விளையாட்டு உலகத்தைச் சேர்ந்தவர்கள், இசை உலகத்தைச் சேர்ந்தவர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையில் பிரகாசிக்கும் முகங்களை நான் சந்தித்துள்ளேன். இந்த விவாதங்களில், இந்தியாவின் படைப்பாற்றல், படைப்புத் திறன் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை அடிக்கடி விவாதிக்கப்பட்டன. படைப்பு உலகத்தைச் சேர்ந்த உங்கள் அனைவரையும் நான் சந்தித்த போதெல்லாம், உங்களிடமிருந்து யோசனைகளைப் பெற்ற போதெல்லாம், இந்த அம்சத்தில் ஆழமாகச் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நண்பர்களே,
புதிய சூரியன் வானத்தில் உதிக்கும்போது வண்ணமயமாக்குவது போல, இந்த உச்சிமாநாடு அதன் முதல் கணத்திலிருந்தே பிரகாசிக்கத் தொடங்கியது. அதன் முதல் பதிப்பிலேயே, வேவ்ஸ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. எங்கள் ஆலோசனைக் குழுவுடன் தொடர்புடைய அனைத்து சக ஊழியர்களும் செய்த கடின உழைப்பை இன்று இங்கே காண முடிகிறது. உலகின் சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் படைப்பாளிகள் இதில் பங்கேற்றனர். மேலும் 32 சவால்களில் 800 இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து இறுதிப் போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நண்பர்களே,
இந்திய அரங்கில் நீங்கள் நிறைய புதிய அம்சங்களை உருவாக்கியுள்ளீர்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. அதைப் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். வேவ்ஸ் சந்தையின் முயற்சியும் மிகவும் சுவாரஸ்யமானது. இது புதிய படைப்பாளர்களை ஊக்குவிக்கும், மேலும் அவர்கள் புதிய சந்தையுடன் இணைக்க முடியும். கலைத் துறையில், வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் இணைக்கும் இந்த யோசனை மிகவும் நல்லது.
நண்பர்களே,
இந்தியாவின் படைப்பு பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பை அதிகரிக்க முடியும். தற்போது இந்தியா திரைப்பட தயாரிப்பு, மின்னணு உள்ளடக்கம், கேமிங், ஃபேஷன் மற்றும் இசை ஆகியவற்றின் உலகளாவிய மையமாக மாறி வருகிறது. நேரடி இசை நிகழ்ச்சிகள் தொடர்பான துறைக்கு நம் முன் பல சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது உலகளாவிய அனிமேஷன் சந்தையின் அளவு நானூற்று முப்பது பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இது இரட்டிப்பாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறைக்கு ஒரு பெரிய வாய்ப்பாகும்.
நண்பர்களே,
நான் சமீபத்தில் பல இளம் படைப்பாளிகள், விளையாட்டாளர்கள் மற்றும் இதுபோன்ற பலருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டுள்ளேன். சமூக ஊடகங்களிலும் உங்கள் படைப்பாற்றலை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன், உங்கள் ஆற்றலை உணர்கிறேன். தற்போது உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில், நமது படைப்பாற்றலின் புதிய பரிமாணங்கள் உருவாகி வருவது தற்செயல் நிகழ்வு அல்ல. ரீல்கள், பாட்காஸ்ட்கள், விளையாட்டுகள், அனிமேஷன், புத்தொழில், போன்ற வடிவங்களில், நமது இளம் மனங்கள் இந்த ஒவ்வொரு வடிவத்திலும் சிறப்பாகச் செயல்படுகின்றன.
மீண்டும் ஒருமுறை, முதல் வேவ்ஸ் உச்சி மாநாட்டிற்கு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள், மிக்க நன்றி. வணக்கம்.
***
(Release ID: 2125749)
SM/IR/AG/KR
Addressing the @WAVESummitIndia in Mumbai. It highlights India's creative strengths on a global platform. https://t.co/U4WQ4Ujv8q
— Narendra Modi (@narendramodi) May 1, 2025
A wave of culture, creativity and universal connect. pic.twitter.com/FpfM4THC5y
— PMO India (@PMOIndia) May 1, 2025
India, with a billion-plus population, is also a land of a billion-plus stories. pic.twitter.com/qtijqtd5Ii
— PMO India (@PMOIndia) May 1, 2025
Create in India, create for the world. pic.twitter.com/cycxbiZZo7
— PMO India (@PMOIndia) May 1, 2025
The dawn of the Orange Economy in India. pic.twitter.com/g2hEX8fjHL
— PMO India (@PMOIndia) May 1, 2025
Even though the screen size is getting smaller, the scope is becoming infinite. pic.twitter.com/n0akwUrv3C
— PMO India (@PMOIndia) May 1, 2025
Today, India is emerging as a global hub for film production, digital content, gaming, fashion, music and live concerts. pic.twitter.com/ubo3q8tx7S
— PMO India (@PMOIndia) May 1, 2025
To the creators of the world — dream big and tell your story.
— PMO India (@PMOIndia) May 1, 2025
To investors — invest not just in platforms, but in people.
To Indian youth — tell your one billion untold stories to the world: PM @narendramodi pic.twitter.com/g7rwE4urf8