பி.எம்.இந்தியா
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு இந்தியாவுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை ஊக்குவிக்கும் என்றும், லட்சக்கணக்கான மக்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். சில முக்கிய திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், காரக்பூர்–மோரெக்ராம் விரைவுச் சாலையை நிறைவு செய்வது மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் என்று குறிப்பிட்டார். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் கங்சாபதி மற்றும் ஷிலாபதி நதிகளின் மீது கட்டப்பட்டு வரும் முக்கிய பாலங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார், இது இணைப்பை மேலும் மேம்படுத்தும். “இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்காக மேற்கு வங்க மக்களையும், ஒட்டுமொத்த கிழக்கிந்திய மக்களையும் நான் பாராட்டுகிறேன்” என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்திய ரயில்வேயை நவீனமயமாக்க நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும், இந்த பணியில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக் கூடாது என்பது அரசின் உறுதியான தீர்மானமாகும் என்றும் பிரதமர் கூறினார். மேற்கு வங்கத்தில் ரயில்வே உள்கட்டமைப்பை மத்திய அரசு வேகமாக விரிவுபடுத்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்ச்சியில், கலைகுண்டா–கன்னிமஹுலி பிரிவில் தானியங்கி பிளாக் சிக்னலிங் சிஸ்டம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. “இந்த முன்முயற்சிகள் பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணங்களை பாதுகாப்பானதாக மாற்றும், மேலும் பயணிகளின் வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்” என்று திரு மோடி வலியுறுத்தினார்.
காமக்யகுரி, அனாரா, தாம்லுக், ஹால்டியா, பாரபூம், சியுரி ஆகிய ஆறு நிலையங்களை அமிர்த பாரத் நிலையங்களாக பிரதமர் திறந்து வைத்தார். வங்காளத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இந்த நிலையங்களில் இன்னும் பிரகாசமாக பிரகாசித்து வருவதாகவும், மேலும் பல நிலையங்கள் மறுவடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்து தொடங்கப்பட்டுள்ளது. “இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்கள் மட்டுமல்லாமல் ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லியிலும் உள்ள மக்களுக்கும் பயனளிக்கும்” என்று திரு மோடி உறுதிப்படுத்தினார்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சாலை மற்றும் ரயில் இணைப்பில் துறைமுகங்களும், நீர்வழிப் போக்குவரத்தும் சமமான முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பிரதமர் வலியுறுத்தினார். பல தசாப்தங்களாக, கிழக்கு இந்தியாவின் இந்த மகத்தான திறன் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார், ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கிய துறைமுக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அர்ப்பணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவின் முக்கிய வர்த்தக மையங்களாக இருந்து வருவதாகவும், ஹால்டியா கப்பல்துறை வளாகத்தின் இயந்திரமயமாக்கல் சரக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் என்றும், துறைமுக திறனை அதிகரிக்கும் என்றும், வர்த்தகத்திற்கு புதிய வசதிகளை வழங்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கு வழி வகுக்கின்றன. இந்தத் திட்டங்களின் பயன்கள் விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சென்றடையும் என்று கூறிய அவர், தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆவ்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240146®=3&lang=1
***
TV/PKV/RJ
Speaking at the launch of development works in Kolkata. These initiatives will boost connectivity and improve the quality of life for people.
— Narendra Modi (@narendramodi) March 14, 2026
https://t.co/yMphItf5By
आज देश में रेलवे को आधुनिक बनाने का तेज अभियान चल रहा है।
— PMO India (@PMOIndia) March 14, 2026
हमारा ये संकल्प है कि पश्चिम बंगाल इस अभियान में पीछे न रहे।
इसीलिए, केंद्र सरकार, पश्चिम बंगाल के रेलवे इंफ्रास्ट्रक्चर का भी तेजी से विस्तार कर रही है: PM @narendramodi
कोलकाता और हल्दिया जैसे बंदरगाह लंबे समय से पूर्वी भारत में व्यापार के प्रमुख केंद्र रहे हैं।
— PMO India (@PMOIndia) March 14, 2026
हल्दिया डॉक कॉम्प्लेक्स का मशीनीकरण हो रहा है।
इससे कार्गो ऑपरेशन और तेज होगा, बंदरगाह की क्षमता बढ़ेगी और व्यापार के लिए नई सुविधा मिलेगी: PM @narendramodi