Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

யோகாவின் மாற்றத்தக்க தாக்கம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


சர்வதேச யோகா தினத்தின் சிறப்பான வெற்றி என்பது, யோகா உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல்நலன் பெறுவது மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடன் நேர்மறையான வாழ்க்கையை வாழவும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்.

யோகா என்பது மனதை முழுமையாக அமைதிப்படுத்துவதற்கான வழியாக கருதப்படுவதாக இந்த சுபாஷிதம் வெளிப்படுத்துகிறது. இந்த இலக்கை அடைய யோகாவில் இரண்டு முதன்மையான முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மனதை அமைதிப்படுத்துவது, சுவாச ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது ஆகியவையாகும்.

***

Release ID:  2276407

SS/IR/LDN/KR