Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வதோதரா செல்லும் வழியில் எடுக்கப்பட்ட சோம்நாத் கோயில் புகைப்படத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, சோம்நாத்திலிருந்து வதோதராவுக்குச் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட சோம்நாத் கோயிலின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பிரபாஸ் பட்டன் கடற்கரையில், சோம்நாத் கோயில், பக்தி, வரலாறு மற்றும் நாகரிக உணர்வின் ஒளிமயமான சின்னமாக உயர்ந்து நிற்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். என்றென்றும் அழியாத இந்தக் கோயில், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், படையெடுப்புகள் மற்றும் நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கிறது என்று திரு மோடி எடுத்துரைத்தார்.

சோம்நாத், ஒவ்வொரு இந்தியருக்கும் வலிமை, தைரியம் மற்றும் நம்பிக்கையை அளிக்கிறது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில் பிரதமர் கூறியுறுப்பதாவது:

“சோம்நாத்திலிருந்து வதோதரா செல்லும் வழியில் இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்…

பிரபாஸ் பட்டன் கடற்கரையில், சோம்நாத் கோயில், பக்தி, வரலாறு மற்றும் நாகரிக உணர்வின் ஒளிமயமான சின்னமாக உயர்ந்து நிற்கிறது. அது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், படையெடுப்புகளையும், பல நூற்றாண்டுகளையும் கடந்து நிலைத்து நிற்கிறது. அது என்றும் அழியாதது. சோம்நாத், ஒவ்வொரு இந்தியருக்கும் வலிமையையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது.

ஹர ஹர மகாதேவ்!”

(Release ID: 2259867)

****

TV/BR/SH