பி.எம்.இந்தியா
வாரணாசி நாடாளுமன்ற தொகுதியின் கிராமங்களிலிருந்து புது தில்லியில் தமது இல்லத்துக்கு வந்த தலைவர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பிரதமரை சந்திக்க வந்த மூன்றாவது குழு இது.
கிராமத் தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், மத்திய அரசின் திட்டங்களான மண் வள அட்டை, பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் இலவச சமயல் எரிவாயு திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்கக்கொண்டார்.