பி.எம்.இந்தியா
விஜயா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயா மேத்தா, நவீன மராத்தி நாடகத்தின் முன்னோடி என்றும் தமது படைப்பாற்றல், கலைத்திறனால் அறியப்பட்டவர் என்றும் திரு மோடி கூறியுள்ளார். அவரது பணிகள், பல தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், நாடக ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“திருமதி விஜயா மேத்தாவின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது. அவர் கலாச்சாரம், திரைப்படம் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக என்றும் நினைவுகூரப்படுவார்.
நவீன மராத்தி நாடகத்தின் முன்னோடியான அவர், தமது படைப்பாற்றல், கலைத்திறனால் அறியப்பட்டவர். அவரது பணிகள், பல தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், நாடக ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.
இந்தத் துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நலன் விரும்புவோர், ஒட்டுமொத்த கலை, சமூகத்தினருடன் உள்ளது. ஓம் சாந்தி.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279686®=3&lang=1
***
SS/IR/KPG/KR
Deeply saddened by the passing of Smt. Vijaya Mehta Ji. She will be remembered as one of the towering personalities of culture and cinema.
— Narendra Modi (@narendramodi) July 1, 2026
A pioneer of modern Marathi theatre, she was known for her creativity and commitment to artistic excellence. Her work inspired generations…
विजया मेहता जी यांच्या निधनाने अत्यंत दुःख झाले आहे. सांस्कृतिक आणि चित्रपट क्षेत्रातील एक उत्तुंग व्यक्तिमत्त्व म्हणून त्या सदैव स्मरणात राहतील.
— Narendra Modi (@narendramodi) July 1, 2026
आधुनिक मराठी रंगभूमीच्या त्या प्रणेत्या होत्या, सर्जनशीलता आणि कलात्मक उत्कृष्टता यांच्याप्रती असलेल्या निष्ठेसाठी त्या ओळखल्या जात…