பி.எம்.இந்தியா
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டமான 1963 பெரிய துறைமுக பொறுப்புக் கழகங்கள் சட்டத்திற்குப் பதிலாக 2016 பெரிய துறைமுக பொறுப்புக்கழக ஆணையங்கள் மசோதாவைக் கொண்டுவரும் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் பெரிய துறைமுகங்கள் மேலும் அதிக திறனுடன் செயல்பட அதிகாரமளிக்கப்படுகிறது. இவற்றிற்கு முழு சுயஆட்சி அதிகாரம் கிடைப்பதாலும் இவற்றின் நிறுவன அமைப்புகளை நவீனப்படுத்துவதாலும் இந்த அதிகாரம் அளிக்கப்படுகிறது.
துறைமுக அடிப்படை வசதி விரிவாக்க மேம்பாடு மற்றும் வர்த்தகத்துக்கு வசதி ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக்க் கொண்ட இந்த மசோதா முடிவு மேற்கொள்ளும் நடைமுறையைப் பரவலாக்குவதையும் துறைமுக ஆளுகையில் நிபுணத்துவத்தை கொண்டுவருவதையும் நோக்கமாக்க் கொண்டது. இந்தப் புதிய பெரிய துறைமுகங்கள் ஆணைய மசோதா 2016 விரைவான வெளிப்படையான முடிவு மேற்கொள்ளும் முறையைக் கொண்டுவந்து அக்கரையுள்ளோரின் நலன்களை பாதுகாத்து மேலும் சிறந்த திட்ட செயலாக்க திறன்களை ஏற்படுத்தும். மத்திய துறைமுகங்களில் உள்ள ஆளுகை நடைமுறையை மாற்றி அமைத்து வெற்றிகரமான உலக நடைமுறையாகிய நில உரிமையாளர் துறைமுக மாதிரிக்கு ஏற்ப அமைப்பது இந்த மசோதாவின் நோக்கம். மேலும் பெரிய துறைமுகங்களின் செயல்பாடுகளில்வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் இது உதவும்.
பெரிய துறைமுகங்கள் ஆணைய மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு: