Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பணிவு, மன்னிப்பு, உன்னத செயல்கள் ஆகிய நற்பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பணிவு, மன்னிப்பு, உன்னதமான செயல்பாடு ஆகியவை ஒருவரின் குணநலத்தின் உண்மையான அணிகலன்கள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த நற்பண்புகளுடன்தான் நாட்டு மக்கள், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை நனவாக்குவதற்காகத் தொடர்ந்து உழைத்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

மன்னிப்பு, அசைக்க முடியாத உறுதி, செயல்பாடுகளில் தூய்மை, தேசத்தின் மீதான உண்மையான அர்ப்பணிப்பு, ஆணவமற்ற பணிவான சுபாவம் ஆகியவை ஒரு நபரின் தெய்வீக நற்பண்புகளை உணர்த்துகிறது என அந்த ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

(Release ID: 2266456)

***

SS/PLM/PD