Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார்: பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை துவக்கி வைத்தார்

பிரதமர் உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார்: பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை துவக்கி வைத்தார்

பிரதமர் உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார்: பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை துவக்கி வைத்தார்

பிரதமர் உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார்: பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை துவக்கி வைத்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தராகண்ட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் கேதார்நாத் கோவிலில் வழிபட்டார். அப்போது கோவிலில் குழுமியிருந்த பெருந்திரளான மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பிரதமர் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள பதஞ்சலி ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையத்தில் உள்ள மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கூடத்திற்கு பிரதமர் சென்று பார்வையிட்டார். யோகா குரு பாபா ராம் தேவ் மற்றும் ஆச்சார்யா பால கிருஷ்ணா ஆகியோர் பிரதமருடன் சென்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நாம் வரலாற்று ரீதியில் பெருமைப்படத் தக்க பாரம்பரியத்தை மறந்து விடவோ உதாசீனப் படுத்திவிடவோ மாட்டோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். நமது முன்னோர்களின் புதுமை படைப்பு வேகத்தை நாம் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு மக்களை ஒன்று சேர்க்க வேண்டுமென்று பிரதமர் கேட்டுக் கொண்டார். புதிய சுகாதாரக் கொள்கை பற்றி குறிப்பிட்ட அவர் இந்த கொள்கை சுகாதாரம், ஆரோக்கியம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இருப்பதாக கூறினார். நோய் வராமல் தடுக்கும் ஆரோக்கிய பராமரிப்பில் தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக மூலிகை கலைக் களஞ்சியத்தின் முதல் தொகுதியை வெளியிட்டார்.

***