பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தொழிற்கொள்கை மேம்பாட்டுத்துறையின் கீழ்க்கண்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்புகள் உருவாகும். கண்காட்சி மற்றும் மாநாட்டு கூடத்தின் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இங்குள்ள இடத்தில் சில்லரை பயன்பாட்டு அரங்கு, அலுவலகம் மற்றம் விருந்தோம்பல் சார்ந்த அரங்குகள் அமைக்கப்படும்.
திட்டப் பின்னணி
மாநாடுகளும் கண்காட்சிகளும் உள்ளூர் உற்பத்தியாளர்களை சர்வதேச வாடிக்கையாளர்களுடன் தொடர்புபடுத்தி வர்த்தக கருத்துருக்களை பரிமாறிக்கொள்வதற்கு மிகப்பெரிய மேடையாகும். இந்தியாவில் சர்வதேசதரத்துடன், அதாவது இடவசதி, திட்ட வசதி,போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஒருங்கிணைந்த கட்டமைப்பு வசதிகளுடன் கண்காட்சிகளை நடத்துவற்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன தில்லி துவாரகாவில் இதுபோன்ற சகல வசதிகளுடன் கூடிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தினை அமைத்து அது செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் சாங்காய், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்று புது தில்லியும் கண்காட்சி சார்ந்த சந்தையில் நுழைந்துவிடும்
*******