பி.எம்.இந்தியா
கொவிட்-19-ன் சவால்களை எதிர்கொள்வது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ‘நவராத்ரா’-வை முன்னிட்டு பிரதமர் மக்களுக்கு 9 வேண்டுகோள்களை விடுத்தார்.
உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் தொற்றை எதிர்ப்பதற்கு இந்திய மக்களிடையே பொறுமையும், மனஉறுதியும் அவசியம் என்று அவர் கூறினார். விரைவாக பரவி வரும் கொவிட்-19 வைரசைக் கட்டுப்படுத்துவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். உலகத்தையே உலுக்கி உள்ள இந்த நோய் தொற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்திய பிரதமர், கொவிட்-19-ஐ தடுப்பதற்கான நடவடிக்கைகளை உணர்ந்திருப்பது அவசியம் என்று கூறினார்.
“நாம் நலமாக இருந்தால் உலகம் நலமாக இருக்கும்” என்ற மந்திரத்தை பின்பற்றுமாறு மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். நாமே விதித்துக் கொண்ட ‘சமூக இடைவெளியை’ கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்றார். இந்த நெறிகளைப் பொறுமையாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும், வீட்டிலிருந்தபடியே பணிகளை செய்யும் போது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரும் வாரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். மருத்துவமனைகள் மீதான பணிப்பளு பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தக் காலகட்டத்தில் சாதாரணமான மருத்துவப் பரிசோதனைகளை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் சாத்தியமானால் ஏற்கனவே திட்டமிட்ட அறுவை சிகிச்சைத் தேதிகளை தள்ளிவைக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இம் மாதம் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ‘மக்கள் ஊரடங்கு’ கருத்தை கடைப்பிடிக்குமாறு மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். இதன்படி அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருப்போர் தவிர வேறு எவரும் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது. இத்தகைய மக்கள் இயக்கத்தின் வெற்றியும், அதனால் கிடைத்த அனுபவங்களும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்றார். இம்மாதம் 22-ந் தேதி நாம் எடுக்கும் இந்த முயற்சி நமது சுயகட்டுப்பாடு, தேசிய நலன் கருதி கடமையை ஆற்றுவதில் உறுதிப்பாடு ஆகியவற்றின் சின்னங்களாக அமையும் என்றார்.
இந்த வகையில் மாநில அரசுகள் தலைமையேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற இளைஞர் அமைப்புகள், சிவில் சமுதாயம் ஆகியன இந்த ‘மக்கள் ஊரடங்கு’ குறித்த விழிப்புணர்வை உருவாக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுயமாக விதித்துக் கொள்ளப்பட்ட இந்த ஊடரங்கு குறித்து தொலைபேசி மூலம் குறைந்தது 10 பேருக்கு தகவல் தெரிவிக்குமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
சுயநலமற்ற சேவை வழங்கியோருக்கு நன்றி தெரிவித்தல்
கொவிட்-19 உலகத் தொற்றினை எதிர்த்துப் போராடுவதில் மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், அரசு ஊழியர்கள், விமான நிறுவனப் பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள், பேருந்து / ரயில்/ மோட்டார் வாகன செலுத்துனர்கள், வீடுகளுக்கு பொருட்களை வழங்குபவர்கள் போன்ற தீரம் மிக்க மக்கள் முன்னணியில் உள்ளனர்.
இந்த மாபெரும் சேவைக்காக இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இம்மாதம் 22-ந் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து குடிமக்களும் தங்கள் வீடுகளின் முற்றங்களிலும், வாயில்களிலும் வந்து நின்று 5 நிமிட நேரம் கை தட்ட வேண்டும் அல்லது மணியோசை செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்த நன்றி தெரிவிக்கும் நேரம் வந்து விட்டது என்பதை நாடெங்கும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சைரன்களை ஒலித்து அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளுதல்
கொவிட்-19 உலகத் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள மத்திய நிதியமைச்சர் தலைமையில் ‘கொவிட்-19 பொருளாதார பதிலடி நடவடிக்கைக் குழு’ அமைக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். இந்த குழுவினர் அக்கறையுள்ள அனைவரையும் கலந்து ஆலோசனை செய்து, அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து பொருளாதாரச் சவால்களை சந்திப்பதற்கான முடிவுகளை மேற்கொள்ளும் என்றார். சவால்களை சந்திப்பதற்கான இந்த முடிவுகளை அமல்படுத்தும் நடவடிக்கையையும் குழுவே மேற்கொள்ளும்.
வர்த்தக சமுதாயத்தினர், உயர் வருவாய் குழுவினர் ஆகியோர் குறைந்த வருமானக் குழுவினரின் பொருளாதாரத் தேவைகளில் உதவ வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். குறைந்த வருமான குழுவினரிடமிருந்துதான் நாம் அனைவரும் பல்வேறு சேவைகளைப் பெற்று வருகிறோம் என்பதை நினைவூட்டிய பிரதமர், பணியிடத்திற்கு வர இயலாத காரணங்களால் பணி செய்ய இயலாமல் போகும் நாட்களுக்கு அவர்களது ஊதியத்தை நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இத்தகைய நெருக்கடியான சமயங்களில் மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தை மறந்து விடக் கூடாது என்று பிரதமர் கூறினார்.
உணவுப்பொருட்கள், பால், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏதும் இருக்காது என்று மக்களுக்கு பிரதமர் உறுதி அளித்தார். ‘பீதியடைந்து பொருட்களை வாங்கிக் குவிக்கும்’ போக்கை மக்கள் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொவிட்-19 தொற்றினை முழுமையான அளவில் வெற்றி கொள்வதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். தவறான தகவல்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று அவர் மக்களை கேட்டுக் கொண்டார். இத்தகைய உலகளாவிய நோய் தொற்றுச் சமயங்களில் ‘மனிதகுலம் வெல்வதையும், இந்தியா வெல்வதையும்’ உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
Watch Live! https://t.co/UHSCp7Wcu9
— PMO India (@PMOIndia) March 19, 2020
मेरे प्रिय देशवासियों,
— PMO India (@PMOIndia) March 19, 2020
पूरा विश्व इस समय संकट के बहुत बड़े गंभीर दौर से गुजर रहा है: PM @narendramodi #IndiaFightsCorona
मैं आज प्रत्येक देशवासी से एक और समर्थन मांग रहा हूं।
— PMO India (@PMOIndia) March 19, 2020
ये है जनता-कर्फ्यू।
जनता कर्फ्यू यानि जनता के लिए,
जनता द्वारा खुद पर लगाया गया कर्फ्यू: PM @narendramodi #IndiaFightsCorona
इस रविवार,
— PMO India (@PMOIndia) March 19, 2020
यानि
22 मार्च को,
सुबह 7 बजे से रात
9 बजे तक, सभी देशवासियों को,
जनता-कर्फ्यू का पालन करना है: PM @narendramodi #IndiaFightsCorona
साथियों,
— PMO India (@PMOIndia) March 19, 2020
22 मार्च को हमारा ये प्रयास, हमारे आत्म-संयम,
देशहित में कर्तव्य पालन के संकल्प का एक प्रतीक होगा।
22 मार्च को जनता-कर्फ्यू की सफलता, इसके अनुभव, हमें आने वाली चुनौतियों के लिए भी तैयार करेंगे: PM @narendramodi #IndiaFightsCorona
संभव हो तो हर व्यक्ति प्रतिदिन कम से कम
— PMO India (@PMOIndia) March 19, 2020
10 लोगों को फोन करके कोरोना वायरस से बचाव के उपायों के साथ ही जनता-कर्फ्यू के बारे में भी बताए।
साथियों,
ये जनता कर्फ्यू एक प्रकार से हमारे लिए,
भारत के लिए एक कसौटी की तरह होगा: PM @narendramodi #IndiaFightsCorona
ये कोरोना जैसी वैश्विक महामारी के खिलाफ लड़ाई के लिए भारत कितना तैयार है, ये देखने और परखने का भी समय है।
— PMO India (@PMOIndia) March 19, 2020
आपके इन प्रयासों के बीच, जनता-कर्फ्यू के दिन,
22 मार्च को मैं आपसे एक और सहयोग चाहता हूं: PM @narendramodi #IndiaFightsCorona
मैं चाहता हूं कि
— PMO India (@PMOIndia) March 19, 2020
22 मार्च, रविवार के दिन हम ऐसे सभी लोगों को धन्यवाद अर्पित करें।
रविवार को ठीक
5 बजे,
हम अपने घर के दरवाजे पर खड़े होकर,
बाल्कनी में,
खिड़कियों के
सामने खड़े होकर
5 मिनट तक ऐसे लोगों का आभार व्यक्त करें: PM @narendramodi #IndiaFightsCorona
पूरे देश के स्थानीय प्रशासन से भी मेरा आग्रह है कि
— PMO India (@PMOIndia) March 19, 2020
22 मार्च को
5 बजे,
सायरन की आवाज से इसकी सूचना लोगों तक पहुंचाएं।
सेवा परमो धर्म के हमारे संस्कारों को मानने वाले ऐसे देशवासियों के लिए हमें पूरी श्रद्धा के साथ अपने भाव व्यक्त करने होंगे: PM @narendramodi #IndiaFightsCorona
संकट के इस समय में,
— PMO India (@PMOIndia) March 19, 2020
आपको ये भी ध्यान रखना है कि हमारी आवश्यक सेवाओं पर,
हमारे हॉस्पिटलों पर दबाव भी निरंतर बढ़ रहा है।
इसलिए मेरा आपसे आग्रह ये भी है कि रूटीन चेक-अप के लिए अस्पताल जाने से जितना बच सकते हैं,
उतना बचें: PM @narendramodi #IndiaFightsCorona
कोरोना महामारी से उत्पन्न हो रही आर्थिक चुनौतियों को ध्यान में रखते हुए, वित्त मंत्री के नेतृत्व में सरकार ने एक
— PMO India (@PMOIndia) March 19, 2020
कोविड-19-Economic Response Task Force
के गठन का फैसला लिया है: PM @narendramodi #IndiaFightsCorona
ये टास्क फोर्स,
— PMO India (@PMOIndia) March 19, 2020
ये भी सुनिश्चित करेगी कि, आर्थिक मुश्किलों को कम करने के लिए जितने भी कदम उठाए जाएं,
उन पर प्रभावी रूप से अमल हो: PM @narendramodi #IndiaFightsCorona
संकट के इस समय में मेरा देश के व्यापारी जगत,
— PMO India (@PMOIndia) March 19, 2020
उच्च आय वर्ग से भी आग्रह है कि अगर संभव है तो आप
जिन-जिन लोगों से सेवाएं लेते हैं, उनके आर्थिक हितों का ध्यान रखें: PM @narendramodi #IndiaFightsCorona
मैं देशवासियों को इस बात के लिए भी आश्वस्त करता हूं कि देश में दूध,
— PMO India (@PMOIndia) March 19, 2020
खाने-पीने का सामान, दवाइयां,
जीवन के लिए ज़रूरी ऐसी आवश्यक चीज़ों की कमी ना हो इसके लिए तमाम कदम उठाए जा रहे हैं: PM @narendramodi #IndiaFightsCorona
पिछले दो महीनों में,
— PMO India (@PMOIndia) March 19, 2020
130 करोड़ भारतीयों ने,
देश के हर नागरिक ने,
देश के सामने आए इस संकट को अपना संकट माना है,
भारत के लिए,
समाज के लिए उससे जो बन पड़ा है,
उसने किया है: PM @narendramodi #IndiaFightsCorona
मुझे भरोसा है कि आने वाले समय में भी आप अपने कर्तव्यों का,
— PMO India (@PMOIndia) March 19, 2020
अपने दायित्वों का इसी तरह निर्वहन करते रहेंगे।
हां, मैं मानता हूं कि ऐसे समय में कुछ कठिनाइयां भी आती हैं, आशंकाओं और अफवाहों का वातावरण भी पैदा होता है: PM @narendramodi #IndiaFightsCorona
कुछ दिन में नवरात्रि का पर्व आ रहा है।
— PMO India (@PMOIndia) March 19, 2020
ये शक्ति उपासना का पर्व है।
भारत पूरी शक्ति के साथ आगे बढ़े, यही शुभकामना है: PM @narendramodi #IndiaFightsCorona
On 22nd March 2020, let us observe a Janata Curfew and add strength to the fight against COVID-19. #IndiaFightsCorona. pic.twitter.com/qOqhQaJES5
— Narendra Modi (@narendramodi) March 19, 2020
At 5 PM on 22nd March 2020, the day of the Janata Curfew, I have a special request. Will you all help? #IndiaFightsCorona pic.twitter.com/Qi63adPUJh
— Narendra Modi (@narendramodi) March 19, 2020
At 5 PM on 22nd March 2020, the day of the Janata Curfew, I have a special request. Will you all help? #IndiaFightsCorona pic.twitter.com/Qi63adPUJh
— Narendra Modi (@narendramodi) March 19, 2020
A request to the people of India- please do not indulge in panic buying. #IndiaFightsCorona pic.twitter.com/ZG1ho45hQG
— Narendra Modi (@narendramodi) March 19, 2020