Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்கா நகரில் நிகழ்ந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்


வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

“ டாக்கா நகரில் நிகழ்ந்த தாக்குதல் நமக்களித்த துயரத்தை வெளியிட வார்த்தைகளே இல்லை. வங்கதேச அதிபர் ஷேக் ஹசினாவுடன் இது குறித்து உரையாடியபோது, இந்த மோசமான தாக்குதல் குறித்து எனது வலுவான கண்டனத்தையும் தெரிவித்தேன்.

“ இந்தத் துயரமான சூழலில் வங்க தேசத்தில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுடன் இணைந்து இந்தியா உறுதியாக நிற்கிறது.

”உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இதில் காயமுற்றவர்கள் விரைவில் நலம்பெறவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று பிரதமர் தெரிவித்தார்.

***