Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோரக்நாத் ஆலயத்தில் பிரதமர் தரிசனம் – கோரக்பூர் உர ஆலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார்

கோரக்நாத் ஆலயத்தில் பிரதமர் தரிசனம் – கோரக்பூர் உர ஆலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார்

கோரக்நாத் ஆலயத்தில் பிரதமர் தரிசனம் – கோரக்பூர் உர ஆலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார்

கோரக்நாத் ஆலயத்தில் பிரதமர் தரிசனம் – கோரக்பூர் உர ஆலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார்


கோரக்பூரில் உள்ள கோரக்நாத் ஆலயத்திற்கு பிரதமர் இன்று வருகை புரிந்தார். அங்கு மகந்த் வைத்தியநாத் சிலையை அவர் திறந்துவைத்தார். அங்கு கூடியிருந்த துறவிகள் மற்றும் மடாதிபதிகள் (ஜீயர்) மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார். மகந்த் வைத்யநாத்துடன் தமக்குள்ள இணைப்பு பற்றி எடுத்துரைத்த பிரதமர், துறவிகளும், மடாதிபதிகளும் சமூகத்தின் பாலும் ஏழைகள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்றார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, கோரக்பூர் உரத்தொழிற்சாலை மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் மையத்திற்கான அடிக்கல் நாட்டினார். இந்த இரு திட்டங்கள் குறித்தும் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் பெருந்திரளாக கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சமச்சீரான இந்தியாவின் வளர்ச்சிக்கு கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி அவசியம் என்றார். உர ஆலைகள் மூடப்படுவதையும், இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை இருப்பதையும் ஏற்க முடியாது என்று கூறிய பிரதமர், இந்த உரத்தொழிற்சாலையை மறுபடியும் நிர்மாணிப்பதன் மூலம் இந்த மாநிலத்தில் தொழில்வளர்ச்சி உத்வேகம் அடையும் என்றார்.

இயற்கை வளங்கள் எப்படி பிரிக்கப்பட்டுள்ளன என்றும் மக்கள் எப்படி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர் , இந்த மாநிலத்தில் சுற்றுலாத்தொழிலுக்கான வளங்கள் அதிகமாக இருக்கின்றன என்றார். புதிய உள்நாட்டு விமான கொள்கையில் பிராந்திய இணைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், அதன் மூலம் அதிக சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்றார்.