Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் புனித மோரன் மோர் இக்னேஷியஸ் அப்ரம் II-ஐ பிரதமர் சந்தித்துப் பேசினார்


அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவ மத தலைவரும் உலக சிரியாக் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவருமான புனித மோரன் மோர் இக்னேஷியர் அப்ரம் II-ஐ சந்தித்து பேசியது பெருமையளிப்பதாக உள்ளதென்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்புக் குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிரப்பட்டிருப்பதாவது:

“அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவ மத தலைவரும் உலக சிரியாக் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவருமான புனித மோரன் மோர் இக்னேஷியர் அப்ரம் II-ஐ சந்தித்து பேசியதில் பெருமை அடைந்தேன்.

நாங்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்.

***

(Release ID: 2233545)

TV/SV/KPG/RK