பி.எம்.இந்தியா
“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் – மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்” என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய கருத்தரங்குகளின் நான்காவது பகுதியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
கல்வி, திறன், சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு, கலாச்சாரம் ஆகிய துறைகள் இந்த இலக்குகளை அடைவதற்கான முதன்மையான அம்சங்கள் என்பதை எடுத்துரைத்த திரு மோடி, பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கான கருத்துகளை தெரிவிக்குமாறு நிபுணர்களையும், கொள்கை வகுப்பாளர்களையும் வரவேற்றார். பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல் என்பது வெறும் அம்சம் அல்ல என்று கூறிய அவர், அது இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் என்றும், இந்த அரசின் தீர்மானம் என்றும் தெரிவித்தார்.
நோய்த் தடுப்பு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார தொலைநோக்கு பார்வையை வலியுறுத்திய பிரதமர், சுகாதார உட்கட்டமைப்பு விரைவாக வலுப்படுத்தப்படுவதாகவும், யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் உலகளாவிய பிரபலம் குறித்தும் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றின் மூலம் சுகாதார பராமரிப்பு சேவைகளுக்கான அணுகல் விரிவடைந்துள்ளதாக கூறினார். உலகளவில் பராமரிப்பாளர்களின் தேவை அதிகரித்து வருவதை குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், புதிய பயிற்சி தொகுப்புகளை வகுக்குமாறு நிபுணர்களை வலியுறுத்தினார். புதிய பயிற்சி தொகுப்புகளை வடிவமைத்தல் மற்றும் கூட்டாண்மைகள் குறித்து இந்த இணைய கருத்தரங்கில் கருத்துகளை தெரிவிக்குமாறு சுகாதரத் துறையைச் சேர்ந்த நிபுணர்களை தாம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். அதனால் நாட்டில் பயிற்சி முறை மேலும் வலிமைப் பெறக்கூடும் என்று திரு மோடி கூறினார்.
சுகாதார பராமரிப்பு துறையில் மின்னணு மாற்றங்கள் தொடர்பாக பேசிய பிரதமர், ஊரகப் பகுதிகளையும் சென்றடையும் தொலை மருத்துவத்தின் வெற்றி குறித்து குறிப்பிட்டார். இந்த வளர்ச்சியை குறிப்பிடும் வேளையில், பயனாளர்களின் அனுபவத்தை மேலும் எளிமைப்படுத்துதல் மற்றும் பொதுமக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். தொலை மருத்துவம் குறித்து இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றும் அதன் பயன்பாட்டை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் திரு மோடி வலியுறுத்தினார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236788®=3&lang=1
TV/IR/LDN/KR
Addressing a post-budget webinar on “Sabka Saath Sabka Vikas-Fulfilling Aspirations of People.”
— Narendra Modi (@narendramodi) March 9, 2026
https://t.co/w1WpTLZ3gZ
भारत आज preventive और holistic health के विज़न पर काम कर रहा है।
— PMO India (@PMOIndia) March 9, 2026
पिछले कुछ वर्षों में देश का health infrastructure मजबूत हुआ है... सैकड़ों जिलों में medical college खुल गए हैं... आयुष्मान भारत योजना, आरोग्य मंदिरों के माध्यम से स्वास्थ्य सेवाओं की पहुंच गांवगांव तक बढ़ाई गई है।…
हमें हमारे education system को real world economy से जोड़ने की प्रक्रिया और तेज करनी होगी... AI और automation, Digital economy और design driven manufacturing… ऐसे विषयों पर हमें फोकस और बढ़ाना होगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 9, 2026
भारत innovation driven economy की ओर बढ़ रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 9, 2026
आज जब हम futuristic technologies के लिए तैयार हो रहे हैं... तो बहुत जरूरी है कि कोई भी बेटी, अवसरों के अभाव में रुक न जाए: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 9, 2026
पिछले कुछ वर्षों में खेलों को राष्ट्रीय विकास की एक महत्वपूर्ण धारा के रूप में देखा गया है।
— PMO India (@PMOIndia) March 9, 2026
खेलो इंडिया जैसी पहलों ने देश में sports ecosystem को नई ऊर्जा दी है।
देशभर में sports infrastructure को मजबूत किया जा रहा है: PM @narendramodi