Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குப் பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், புனித யாத்திரையை ஐந்து உறுதி மொழிகளுடன் இணைத்து மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்


ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர்களின் பயணம் பாதுகாப்பானதாகவும், அனைத்து வகையிலும் மங்களகரமானதாகவும் அமைய வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். “பாபா பர்ஃபானியின் தரிசனத்துடன் தொடர்புடைய அமர்நாத் யாத்திரை, நாட்டின் ஆன்மீக மரபு, கலாச்சார ஒற்றுமையின் காலத்தால் அழியாத அங்கமாகும்” என்று திரு. மோடி கூறியுள்ளார்.

இந்தப் புனித யாத்திரையை ஐந்து உறுதிமொழிகளுடன் இணைத்து, யாத்ரீகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280719&reg=3&lang=1

(Release ID: 2280719)

****

TV/SV/SH