பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான அறிவுசார் சொத்துரிமைகள் (IPR-கள்) விஷயத்தில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்நுணுக்க பரிமாற்றங்களில் கூட்டாக பணியாற்றலும், சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும் பரவலான மற்றும் வளைந்துகொடுக்கக் கூடிய நடைமுறைகளை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துகிறது. அறிவுசார் சொத்துரிமைகளை நல்ல முறையில் பாதுகாக்கவும் இது வகை செய்கிறது.
விளைவு :
இரு நாடுகளிலும் தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கணிசமான பலன்கள் அளிக்கக் கூடிய வகையில் அறிவுசார் சொத்துரிமை சூழல்கள் மற்றும் புதுமை சிந்தனைகளில் உள்ள அனுபவங்களை இந்தியா பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்திய மக்களைப் போன்று, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் பலதரப்பட்ட அறிவுசார் சொத்துரிமை உருவாக்கங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த நடைமுறைகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். உலகளாவிய புதுமை சிந்தனையில் முக்கிய பங்காளராக மாறுவது என்ற இந்தியாவின் பயணத்தில் தடம் பதிக்கும் ஒரு நடவடிக்கையாக இது இருக்கும். தேசிய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கை 2016-ன் நோக்கங்களை மேலும் வலுப்படுத்துவதாகவும் இருக்கும்.
அம்சங்கள் :
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பின்வரும் துறைகளில் ஒத்துழைப்புக்கான செயல்பாடுகளை முடிவு செய்வதற்கு இரு தரப்பிலும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு ஒத்துழைப்புக் கமிட்டி (JCC) அமைக்கப்படும் :
*****