Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

ஆஸாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

ஆஸாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

ஆஸாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு


 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த ஆஸாத் ஹிந்த் அரசின் 75-ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திரமோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

ஆஸாத்  ஹிந்த்  அரசு அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நிறைவு என்ற பெருமை மிகு நிகழ்வு குறித்து நாட்டுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆஸாத்  ஹிந்த்  அரசு சுபாஷ் சந்திரபோஸின் வலுவான ஒற்றுமையான இந்தியா என்ற தொலைநோக்கை குறிப்பதாக தெரிவித்தார். தேச நிர்மாணத்தில் ஆஸாத்  ஹிந்த்  அரசு தீவிரமாக பங்கேற்றது என்றும் அந்த அரசு தனக்கென வங்கி, நாணயம், தபால்தலைகளை உருவாக்கியது என்றும் கூறினார்.

நேதாஜியின் பங்களிப்பை நினைவுகூர்ந்த திரு. மோடி, சுபாஷ் சந்திரபோஸ் தொலைநோக்கு கொண்டவர் என்றும் ஆற்றல் மிக்க பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவை ஒருமைப்படுத்தியவர் என்றும் கூறினார். தமது இளம் வயதிலிருந்தே நாட்டுப்பற்றை காட்டியவர் போஸ் என்று கூறிய பிரதமர், அவர் தமது அன்னைக்கு எழுதிய கடிதங்களிலிருந்து இது தெளிவாகிறது என்றார்.

நேதாஜி இந்தியர்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுமையிலும் சுதந்திரத்திற்காகவும். சுய ஆட்சிக்காகவும் போராடிய அனைவருக்கும் எழுச்சியூட்டியவர் என்று பிரதமர் கூறினார். இந்த வகையில், தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா, நேதாஜியால் எவ்வாறு எழுச்சிப்பெற்றார் என்று குறிப்பிட்டார்.

சுபாஷ் சந்திரபோஸ் கனவு கண்ட புதிய இந்தியாவை நிர்மாணிப்பதற்கு இன்னும் நெடிய தூரம் செல்ல வேண்டி உள்ளது என்று நினைவுப்படுத்திய பிரதமர், நேதாஜியின் கொள்கைகளால் மனஎழுச்சி பெற்று நாட்டின் மேம்பாட்டிற்காக உழைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். பெரிய அளவில் தியாகங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றது என்று கூறிய அவர், இந்த சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டியது குடிமக்களின் கடமை என்றார்.

கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது இந்திய தேசிய ராணுவத்தின் ராணி ஜான்சி படைப்பிரிவு  தோற்றுவித்து நமது ஆயுதப்படைகளில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிப்பதற்கான அடித்தளத்தை நாட்டினார் என்று கூறினார். இந்த பாரம்பரியத்தை மத்திய அரசு அப்படியே பின்பற்றி வருகிறது என்றும் ஆயுதப்படைகளில் பெண்களுக்கு நிரந்தர அதிகாரிகள் அந்தஸ்த்து வழங்குவதில் சமவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.