Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் பல்கேரியா இடையே சுற்றுலா துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு, இந்தியா மற்றும் பல்கேரியா இடையேயான சுற்றுலா துறையில் ஒத்துழைப்பை வலுபடுத்தும் வகையில் சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

விவரங்கள்:

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கொள்கள்:

  • சுற்றுலா துறையில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவாக்குவது
  • சுற்றுலா தொடர்பான தகவல் மற்றும் தரவு பரிமாற்றம்
  • சுற்றுலா பங்குதாரர்களான விடுதி உரிமையாளர்கள் மற்றும் சுற்று பயண இயக்குநர்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தல்
  • மனித வள மேம்பாடு ஒத்துழைப்பு தொடர்பான பரிமாற்றம் நிகழ்ச்சிகள் அமைத்தல்
  • இரு வழி சுற்றுலாவை மேம்படுத்த, சுற்றுலா இயக்குநர்கள்/ ஊடகங்கள்/ கருத்து உருவாக்குவோர் ஆகியோருக்கு பரிமாற்றம் நிகழ்ச்சிகள்
  • சுற்றுலா ஊக்குவிப்பு, சந்தைப்படுத்துதல், சுற்றுலா இலக்கு வளர்ச்சி மற்றும் மேலாண்மை தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்
  • இருநாடுகளையும் சுற்றுலா இலக்குக்காக கவரக்கூடிய வகையில் திரைப்படம் மூலம் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்
  • பாதுகாப்பான, கவுரவமான மற்றும் நிலையான சுற்றுலாவை ஊக்குவித்தல்

பின்னணி

     இதற்கு முன்பு இந்தியாவும் பல்கேரியாவும் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி சுற்றுலாத் துறை தொடர்பான ஒத்துழைப்பு குறித்த ஒப்புதலை கையெழுத்திட்டது. இந்தியாவின் சுற்றுலா சந்தையில் பல்கேரியா நல்ல வாய்ப்பினைக் கொண்டுள்ளது. (2017 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பல்கேரியாவிலிருந்து 5288 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்) பல்கேரியாவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

*****