Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்

இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்


அரசுமுறைப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோஅதிபர் மாளிகையில் இன்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் தலைமை விருந்தினராகஅதிபர் பிரபோவோ 2025 ஜனவரியில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பின்இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.

நேரடிப் பேச்சுவார்த்தை, உயர்நிலைப் பிரதிநிதிக்குழு அளவிலான பேச்சுவார்த்தை ஆகிய இரு வடிவங்களிலும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளை இரு தலைவர்களும் மேற்கொண்டனர். வர்த்தகம், முதலீடுபாதுகாப்புகடல்சார் ஒத்துழைப்புடிஜிட்டல் மற்றும் நிதி தொழில்நுட்பம்எரிசக்திசுகாதாரம், மருந்துத் தொழில்விண்வெளிமுக்கிய கனிமங்கள் மற்றும் அரிய கனிமங்கள்கலாச்சாரம்சுற்றுலாவிவசாயம்மக்கள் பரிமாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முழு நிலையையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

இந்தியாவின் ‘டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தநிலை மின்வணிக கட்டமைப்பை’ அடிப்படையாகக் கொண்ட ‘இந்தோனேஷிய திறந்தநிலை மின்வணிக கட்டமைப்பு’ தொடங்கப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர். 2027-ல் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் இந்தோனேஷியப் பயணத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வை “கலாச்சார மற்றும் கல்வி சார்ந்த ராஜீய உறவுக்கான தாகூர்-தேவந்தரா ஆண்டாக” இரு நாடுகளும் இணைந்து கொண்டாடும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்துபாதுகாப்புமுக்கிய கனிமங்கள் மற்றும் அரிய கனிம வகைகள்அறிவியல், தொழில்நுட்பம்கல்விதேர்தல் நடைமுறைகள்தொலைத்தொடர்புவிவசாயம்கடல்சார் பாதுகாப்புவிண்வெளிஎஃகு விநியோகத் தொடர்பேரிடர் மேலாண்மைமருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறைசுகாதாரப் பணியாளர் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகள் தலைவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டன. யோக்யகர்த்தாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோயில் வளாகத்தின் பாதுகாப்புக்கும் புனரமைப்புக்கும் இந்தியாவின் ஆதரவு விருப்பக் கடிதமும் பரிமாறப்பட்டது.

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்துஅதிபர் பிரபோவோ பிரதமரை கெளரவிக்கும் வகையில் மதிய விருந்து அளித்தார். அதிபர் பிரபோவோவின் கனிவான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்அவரை இந்தியாவிற்கு வருகை தருமாறு  அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281978&reg=3&lang=1

***

SS/SMB/SH