Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ.டி.எப்.சி வங்கி – பிரதமர் துவங்கி வைத்தார்

ஐ.டி.எப்.சி வங்கி – பிரதமர் துவங்கி வைத்தார்

ஐ.டி.எப்.சி வங்கி – பிரதமர் துவங்கி வைத்தார்

ஐ.டி.எப்.சி வங்கி – பிரதமர் துவங்கி வைத்தார்

ஐ.டி.எப்.சி வங்கி – பிரதமர் துவங்கி வைத்தார்

ஐ.டி.எப்.சி வங்கி – பிரதமர் துவங்கி வைத்தார்

ஐ.டி.எப்.சி வங்கி – பிரதமர் துவங்கி வைத்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.டி.எப்.சி வங்கியை புதுதில்லியில் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது. ஊரகப் பகுதிகளில் வங்கித் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைய உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைத் தொடர்பு துறை கண்ட வளர்ச்சி நிகராக இருக்கும்.

ஐ.டி.எப்.சி வங்கியின் வெற்றிகரமாக 18 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் தற்போது ஊரகப் பகுதிகளில் வங்கித் துறை விரிவடைந்து வருவதால் இது மேலும் சவாலாக இருக்கும் என்று குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவி வந்த இந்த வங்கி தற்போது வாழ்க்கைத் தரத்தை வளர்ச்சி அடைய செய்ய இந்த அமைப்பு உதவுகிறது.

புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி வரும் இந்த நேரத்தில் மொத்த வங்கித் துறையும் முக்கிய மாற்றத்தை கண்டு வருகிறது. வருங்கால வங்கித் துறை இடமின்றி தாள் இன்றி இருப்பதுடன் ரூபாய் தாளும் இன்றி இருக்கும். இது கருப்பு பணத்தை அழிக்க உதவும்.

மத்திய அரசு வங்கித் துறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக உயர் நிலை பதவி நியமனங்கள், வங்கி வாரியம் அமைப்பு, வங்கிகளுக்கு மறு முதலீடு, வராகடன் மீட்பு, வங்கி மேலாண்மைக்கு அதிகாரம் அளித்தல், முக்கிய குறியீடு மூலம் கணக்குக்கான வடிவமைப்பை அமைப்பது, வங்கிகளில் ஆட்சி துவத்தில் மாற்றத்தைக் கொண்டுவருது ஆகியவற்றை அரசு செய்துவருகிறது என்று பிரதமர் கூறினார்.

மத்திய நிதித் துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, மத்திய நிதி துறையின் இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சின்ஹா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

•••••