Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் 11.02.2018 அன்று சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் 11.02.2018 அன்று சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் 11.02.2018 அன்று சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் 11.02.2018 அன்று சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்


நமது நாட்டில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ரூ.350-க்கும் கூடுதலான விலையில் விற்ற எல்ஈடி பல்புகள் தற்போது ரூ.40 முதல் 45 வரைக்குள் கிடைக்கின்றன. குறைந்த விலையில் எல்ஈடி பல்புகள் கிடைப்பதுடன், இவற்றைப் பயன்படுத்தும் வீடுகள் மொத்தத்திலுமாக ஆண்டுக்கு மின்சாரக் கட்டணமாக ரூ.15,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் புதிய இந்தியா கனவை நனவாக்கும் முயற்சியில் ஒவ்வொரு இந்தியனும் பாடுபட்டுவருகிறார். வளர்ச்சிவாய்ப்புக்களில் சமஉரிமையையும், கனவுகளை நனவாக்கும் நிலையையும் ஏழைகளிலும் ஏழையாக இருக்கும் இந்தியர் பெறும் வகையில் இந்தியா முன்னேறிவருகிறது.

இன்று என் முன்பாக ஒரு சிறிய இந்தியாவைக் காண்கிறேன். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்துள்ள இந்தியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள் இணைந்து பெரிய கண்கொள்ளாக் காட்சியை அளித்துள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக நான் ஓமனுக்குப் பயணமாக வந்தேன். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது ஆப்பிரிக்கா செல்லும் வழியில் சலாலா நகரைக் கடந்து சென்றேன். அச்சமயம், ஓமனுக்கு வந்து உங்களையெல்லாம் சந்தித்து உங்களில் ஒருவனாக இருக்க விரும்பினேன். ஆனால், அந்த வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கும், ஓமனுக்கும் இடையிலான உறவுகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. கடந்த 3 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் தொன்மையான நட்புடன் கூடிய உறவுகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து வருகிறோம். இன்றைய தேவையின்படி, புதிய கொள்கையை உருவாக்கி, இந்த வடிவத்தைக் கொடுத்து வருகிறோம்.

இந்தியாவின் உயர்ந்துவரும் அந்தஸ்து மற்றும் வளர்ச்சியைப் போல இந்தியாவின் மீதான வளைகுடா நாடுகளின் ஆர்வமும் வளர்ந்துவந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் கவனித்திருப்பீர்கள்.

ஓமன் உடனான இந்தியாவின் வரலாற்று உறவுகளில் புதிய வேகம் ஏற்பட்டிருப்பது இயல்புதான். ஓமனின் மேதகு சுல்தான் அவர்கள் இந்தியாவுடன் சிறந்த உறவுகளை கொண்டுள்ளார். இன்று மேதகு சுல்தான் பெயரைக் கொண்ட இந்த அரங்கில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள உங்களுடன் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த்து.

இது மேதகு சுல்தான் இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் கொண்டுள்ள மேலான அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தச் சிறப்புக்காக அவருக்கு நாங்கள் பெரிதும் நன்றியுடையவர்கள் ஆகிறோம்.

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்ற கொள்கையைப் பின்பற்றி நாடெங்கிலும் உள்ள சாதாரண மனிதனுக்கு அவர்களது வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கி உழைத்துவருகிறோம்.

இவை அனைத்தையும் நமது அரசு பாரம்பரியத்தில் சேர்த்துள்ளோம்: நடைமுறைகளை எளிமையாக்கியுள்ளோம்: தேவையற்ற சட்டங்களை அகற்றியுள்ளோம்: அரசு அலுவலகங்களில் பயன்படும் படிவங்களின் அளவை 40 முதல் 50 பக்க அளவிலிருந்து 4 முதல் 5 பக்க அளவாகக் குறைத்துள்ளோம்: இந்தப் படிவங்கள் அனைத்தையும் இணையம் மூலம் பூர்த்தி செய்ய அமைப்புகளை உருவாக்கியுள்ளோம்: மக்களின் உண்மையான குறைகளைக் கேட்டு அவற்றைத் தீர்த்துவைக்க பாடுபடுகிறோம்.

மாறியுள்ள இந்தியாவில் ஏழை மக்கள் வங்கிகளில் இருந்து அவமரியாதையுடன் திருப்பி அனுப்பப்படுவதில்லை. மாறியுள்ள இந்தியாவில் எரிவாயு இணைப்புகள், மின்சார இணைப்புகள் வழங்குவதற்கு அரசு வீடுகள் தேடிச் செல்கிறது.

நாள் ஒன்றுக்கு 90 பைசா மற்றும் நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் பிரிமியம் தொகையில் ஆயுள் காப்பீடு மற்றும் பாதுகாப்புக் காப்பீடுகள் ஏழை மக்களுக்குக் கிடைக்கின்றன. இந்த காப்பீட்டு திட்டங்களின் கீழ், ஏழை மக்களுக்குக் காப்பீட்டுத் தொகைகளாக ரூ.2,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் மொத்த உலகத்தின் கவனத்தையே கவரும் வகையிலான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்ற இத்திட்டத்தின்படி, நாட்டின் 10 கோடி ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது, இதன் மூலம் சுமார் 45 முதல் 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். திட்டத்தின்படி, ஏழை குடும்பம் ஒன்றுக்கு ரூ.5,00,000 வரையில் இலவச சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம்.

தற்போது நாட்டில் 21 ஆம் நூற்றாண்டின் தேவையைக் கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாகப் போக்குவரத்து துறையில் ஒன்றுக்கு ஒன்று நிறைவுப்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.

நெடுஞ்சாலைகள் , விமானப் பாதைகள் , நீர்வழிப் பாதைகள் என ஒவ்வொன்றும் அதன் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன .

பாரத் மாலா திட்டத்தின் கீழ் 53 ஆயிரம் கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன .நாட்டின் 11 பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் கடலோர பொருளாதாரத்தையும் அது தொடர்பான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த சாகர்மாலை திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

மீனவச் சமுதாயச் சகோதரர்களுக்காக நீலப் புரட்சித் திட்டத்தை தொடங்கியுள்ளோம்..அவர்கள் இழுவைப்படகுகள் வாங்கி கொள்ள உதவி வருகிறோம் .நாட்டில் 110 க்கும் அதிகமான நீர் வழிப் பாதைகளை அரசு மேம்படுத்திவருகிறது.
தற்போது முடிவெடுப்பது இந்தியாவில் காலதாமதப்படுவதில்லை. புதிய சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு காலக்கெடுவுக்குள் திட்டங்கள் நிறைவடைகின்றன. இந்தியாவில் பணிப் பண்பாடு மாறியுள்ளது என்பதற்கு இது ஓர் உதாரணம். இந்த உதாரணம் புதிய இந்தியாவுக்கான உதாரணமாகும்.

நன்கு வரையறுக்கப்பட்ட கொள்கையின்படி, தெளிவான மனசாட்சியுடன் முடிவெடுக்கப்படும்போது நாட்டின் நிதி சேமிக்கப்படுகிறது. பணிகள் நடைபெற்றுவரும்போது தற்போதைய ஆதாரங்கள் சாத்தியமான சிறந்த முறையிலும், திறம்பட்ட வகையிலும் பயன்படுத்தப்படும் போது நாட்டின் நிதி மிச்சப்படுத்தப்படுகிறது.

நாட்டின் முன்னேற்றத்தில், அதன் கட்டுமானத்தில் நீங்கள் எல்லாம் முக்கியமான கூட்டாளிகள் என்று நான் கருதுகிறேன். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்பதில் நீங்கள் எடுத்திருக்கும் உறுதிமொழியின் தாக்கமாகப் புதிய இந்தியா விரைவில் உருவாகும் என்பதில் ஐயமில்லை.