பி.எம்.இந்தியா
சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியக் குடியரசின் மத்திய சுற்றுலா அமைச்சகத்துக்கும் கிர்கிஸ்தான் குடியரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் தகவல் மற்றும் சுற்றுலாத்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்து.
பரஸ்பர நன்மைகளை கருத்தில் கொண்டால் சுற்றுலாத்துறையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதால் சம்மந்தப்பட்ட 2 தரப்பும் ஒன்று மற்றதன் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும். இதனால் இரு நாடுகளிலும் பொருளாதார மேம்பாடு ஏற்படும். கிர்கிஸ்தான் குடியரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதை அடுத்து இந்த முக்கியமான ஆதார சந்தையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் சில:
கிர்கிஸ்தான் சுதந்திர நாடுகளின் காமன்வெல்த் அமைப்பின் ஒரு பகுதியாகும். இந்நாட்டைச் சுற்றி கசகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகியன உள்ளன. இந்தியாவும் கிர்கிஸ்தானும் வலுவான ராஜீய உறவுகளையும் நீண்டகால பொருளாதார உறவுகளையும் பெற்றுள்ள நாடுகள் கடந்த 5 ஆண்டுகளில் கிர்கிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை விவரம்.
2012 2013 2014 2015 2016
1348 2103 2479 2729 2883*
*ஜனவரி – நவம்பர் 2016