Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சூர்யசக்தி, வேளாண்மை, பகிரப்பட்ட வளமை குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, சர்வதேச சூர்யசக்தி கூட்டமைப்பு தலைமை இயக்குநர் திரு ஆசிஷ் கன்னா ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சூர்யசக்தி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக உருவாகி வருவதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. வேளாண்மைக்கு தூய்மை எரிசக்தியைப் பயன்படுத்தும் இந்திய முறை ஆஃப்பிரிக்காவிற்கும் ஏற்ற ஒரு மாதிரியை அளிப்பதாகவும் இது பகிரப்பட்ட வளமையை வலுப்படுத்துதல், சமூகங்களுக்கு அதிகாரமளித்தல், உணவுப் பாதுகாப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு உதவுவதாக கூறுகிறது.

இந்த சாதனையை இந்திய விவசாயிகளுக்கும், நாட்டிற்கும் பெருமை அளிக்கும் அம்சம் என்று கட்டுரை விவரிக்கிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“சூர்யசக்தி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக உருவாகிறது. வேளாண்மைக்கு தூய்மை எரிசக்தியைப் பயன்படுத்தும் இந்திய முறை, ஆஃப்பிரிக்காவிற்கும் ஏற்ற ஒரு மாதிரியை அளிக்கிறது, இது பகிரப்பட்ட வளமையை வலுப்படுத்துகிறது, சமூகங்களுக்கு அதிகாரமளித்து, உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. உண்மையாக இது நமது விவசாயிகளுக்கும், நமக்கும் பெருமை அளிக்கும் அம்சமாகும்.

மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, சர்வதேச சூர்யசக்தி கூட்டமைப்பு தலைமை இயக்குநர் திரு ஆசிஷ் கன்னா ஆகியோரின் கட்டுரையை வாசிக்கவும்.”  

***

(Release ID: 2273908)

SS/IR/RJ/SH