Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜக்தால்பூர்-புவனேஸ்வர் விரைவு ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


ஜக்தால்பூர் – புவனேஸ்வர் விரைவு ரயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜக்தால்பூர்-புவனேஸ்வர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், தங்களது அன்புக்குரியவர்களை இழந்துள்ளவர்கள் குறித்தே கவலை கொண்டுள்ளேன். இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.

ரயில் விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இந்த விவகாரத்தில் நிலைமையை ரயில்வே அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மீட்பு மற்றும் மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக பணியாற்றி வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.