Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜவுளித் துறைக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளால் பிரிக்கப்படும் வரிகளைத் தள்ளுபடி செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


ஜவுளித் துறைக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படும் வரிகளைத் தள்ளுபடி செய்யும் திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஆயத்த ஆடைகளை வரியில்லாமல் ஏற்றுமதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்த யோசனை காரணமாக ஜவுளித்துறைப் போட்டி சமாளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயத்த ஆடைகளை வரியில்லாமல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பால், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறையில் சமத்துவமான அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

*****