பி.எம்.இந்தியா
டி. 20 பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை வென்ற அணி பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தது.
இந்த சந்திப்பின் போது, டி. 20 பார்வையற்றோருக்கான கிரிக்கெட் அணி புரிந்த சாதனைகளை பாராட்டிய பிரதமர் வருங்காலங்களில் மேலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவர்களின் கவனத்தையும் சிறப்புத் திறனையும் பாராட்டிய பிரதமர், இவர்களின் செயல் பல லட்ச மக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தூண்டுகோலாக அமைத்து உள்ளது என்றார்.
அணியினர் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை, பந்து, பிரதமருடைய பெயர் பதிக்கப்பட்ட அணியின் ஆடை ஆகியவற்றை டி. 20 பார்வையற்றோருக்கான கிரிக்கெட் அணி பிரதமருக்கு பரிசளித்தது.
பிரதமர் தான் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டை மற்றும் பந்தினை அவர்களுக்கு அளித்தார்.