Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய ஒருமைப்பாட்டுக்காக பாடுபடுவோருக்கு சர்தார் பட்டேல் பெயரில் விருது வழங்கப்படும் என பிரதமர் அறிவிப்பு


     கெவாடியாவில் நேற்று நடைபெற்ற டிஜிபிக்கள் / ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஒருமைப்பாட்டுக்காக பாடுபடுவோருக்கு சர்தார் பட்டேல் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் சிறப்பாக ஈடுபடுவோருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.   

     “இந்தியாவை ஒருங்கிணைப்பதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் சர்தார் பட்டேல். எனவே, தேசிய ஒருமைப்பாட்டுக்காக சர்தார் பட்டேல் பெயரில் விருது வழங்குவது, அவருக்கு செலுத்தப்படும் சிறந்த மரியாதையாக அமைவதுடன், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்காக ஏராளமானோர் பாடுபடுவதற்கு ஒரு உந்துசக்தியாக அமையும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார். 

 

******