Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


தில்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஏஐ உச்சிமாநாடு இந்தியாவின் திறமைகளுக்கு உலகளாவிய பரவலான பாராட்டுக்கு சாட்சியமாக விளங்கியது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனிதகுலத்திற்கு மகத்தான பயனளிக்கும் தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்களின் மனநிலை எவ்வாறு தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்-  

अविज्ञातस्य विज्ञानं विज्ञातस्य च निश्चयः। आरम्भः कर्मणां शश्वदारब्धस्यान्तदर्शनम्॥

மறைந்திருக்கும் அறிவை வெளிக்கொண்டு வர பரிசோதனையும், ஆராய்ச்சியும் முக்கியமானவை என்பதை இந்த ஸ்லோகம் தெரிவிக்கிறது. அறியப்பட்ட உண்மைகளின் கருத்தும், பகுப்பாய்வும் ஆராய்ச்சியின் தொடக்கமாகும். அந்த ஞானம், அனுபவம் மற்றும் கூர்நோக்கு மூலம் உறுதி செய்யப்படுகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

दिल्ली में हुए ऐतिहासिक AI समिट में पूरी दुनिया ने भारत के सामर्थ्य की जमकर सराहना की है। इससे पता चलता है कि टेक्नोलॉजी को लेकर हमारे युवा साथियों की सोच पूरी मानवता के बहुत काम आने वाली है। 

अविज्ञातस्य विज्ञानं विज्ञातस्य च निश्चयः।

आरम्भः कर्मणां शश्वदारब्धस्यान्तदर्शनम् ।।

***

(Release ID: 2231596)

AD/SMB/RJ/KR