Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் ஊரக வளர்ச்சி பணியாளர்களுடன் பிரதமர் உரையாடல்

பிரதமரின் ஊரக வளர்ச்சி பணியாளர்களுடன் பிரதமர் உரையாடல்

பிரதமரின் ஊரக வளர்ச்சி பணியாளர்களுடன் பிரதமர் உரையாடல்

பிரதமரின் ஊரக வளர்ச்சி பணியாளர்களுடன் பிரதமர் உரையாடல்

பிரதமரின் ஊரக வளர்ச்சி பணியாளர்களுடன் பிரதமர் உரையாடல்


மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிரதமரின் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் திட்டம் கீழ் பணிபுரியும் 230 க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

தொலைதூர, ஊரக, மலைவாழ் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், தாய் சேய் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, வாழ்வாதாரம், தூய்மையான பாரதம், ஒன்றுப்பட்ட பாரதம்-ஒப்பற்ற பாரதம் அரசாளுமையில் மக்களின் பங்கேற்பு ஆகிய திட்டங்களில் பதினோரு இளைஞர்கள் தாங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளை விளக்கினர்.

அதன் பிறகு பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி, ஊரக கல்வி, மலைவாழ் மக்களின் வளர்ச்சி, சுற்றுச்சூழலுக்கேற்ப விவசாயம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகியவை குறித்த தங்களின் கருத்துகளை பல்வேறு பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

“நரேந்திர மோடி செயலி” குறித்த கருத்துகளை மக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு தான் எழுதிய கடிதத்தை பிரதமர் நினைவு கொண்டார். மக்களிடமிருந்து தனக்கு கிடைத்த பெரியளவிலான பதிவுகளை பாராட்டிய பிரதமர், அதில் ஒரு புகார் கூட இல்லை என்று கூறினார். இன்றைய விளக்கக் காட்சிகளும் தனக்கு கிடைக்கப் பெற்ற ஆலோசனைகளும் மக்களின் பங்கேற்பு என்பது பொதுவான தலைப்பு ஆகும் என்று பிரதமர் கூறினார். மாற்றங்களைக் கொண்டு வர இது ஒரு முக்கிய அம்சமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

குடும்ப சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் நாட்டின் ஊரக மற்றும் பின் தங்கிய பகுதிகளில் அர்பணிப்புடன் செயல்பட்ட பங்கேற்பாளர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

பிரதமர் ஊரக வளர்ச்சி பயனாளிகள் திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பதிவு செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் பிரதமர் ஊரக வளர்ச்சி பயனாளிகள் திட்டத்தின் கீழ் செயல்படுபவர்களின் செயல்களை காட்சி விளக்கம் மூலம் பிரதிபலிக்கும் “ ஸ்கிர்ப்டிங் சேஞ்ச்” என்ற புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்.

மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் திரு சௌதிரி பீரேந்தர் சிங் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

••••••